Wednesday, April 20, 2011

இரவு உலகம்......

"ஜொலிக்கும் கார் முன் விளக்கின் ஒளியில்,
திறக்கும் அந்த விடுதியின் முதல் கதவு;
இருக்கும் நமக்கு முன்னே வந்த ஊர்திகள்,
பார்ப்பவர் எல்லார்க்கும் சிவந்த விழிகள்;"

"குறைந்தது இருவர் , - குறைந்த
உடையில் பெண்கள்,
மயக்கும் குரல்கள்,
மங்கிய விளக்கில்;
இனிக்கும் மதுவின்,
இயல்பான வாடையில்,
ரசிக்கும் வகையில்,
தூரத்தில் இசை;"

"பின்னும் ஒருகதவு திறக்க,
ஓங்கிய இசை முகத்தில் அடிக்க,
லேசெர் ஒளியால் அரங்கம் நிறைய,
லேசாய் நம் மனம் பறக்க "

"பட்டும் படாமல் ஆடும் இளசுகள்,
தொட்டும் தொடாமல் ஆகும் உரசல்கள்,
உறக்கம் இல்லா உணர்வுகள் என்னும்
ஏக்கம் தணிக்கும் பாலை சோலைகள்;
பாட்டில்கள் பந்தாடி , மகிழ்விக்கும் கூத்தாடி,
புகைபோக்க காத்தாடி, குளிர்விக்க குளிரூட்டி,
அடக்க முடியவில்லை என்றால் அரை ரெடி;
மூச்சா அடிக்கும்மிடமும் கண்ணாடி,"

சிரிப்பும் , கும்மாளமும் சிறிது நேரம் தான் என்றெண்ணி,
களிப்பும் அலுத்துவிட, துடிக்கும் சிலர் உள்ளம்

நகைக்கும் உலகிற்கு, இங்கே நடப்பது ஓர் செய்தியே,
ஆனால் ........
இங்கே இருக்கும் மானிடர்க்கு, சொர்க்கம் வேறில்லையே...

No comments:

Post a Comment