Thursday, May 5, 2011

ஜெனி மினி கவிதைகள்....

"யாரும் இல்லாத கடற்கரையில்,
நிற்கும் படகை போல் ;
உணர்ந்தேன்,
நீ என்னோடு இல்லாத ;
நாட்களை."

"உன்னை விட்டு;
பிரிய மனம் இல்லை எனக்கு,
அதனால் தான்;
நினைக்கும் போதெல்லாம்,
உன்னை தொட்டு செல்கிறேன்.
- விழிகளிடம்... இமைகள் சொல்லிய கவிதை ."

" உன் அன்பை உண்மையாக நேசிக்க,
பலபேர் இருக்கலாம்,
---ஆனால்
உன் அன்பை உயிராக சுவாசிக்க,
நான் மட்டுமே இருப்பேன்,
- எப்போதும்."

"சிலர் பிரிந்து போனால் ,
மனசு மறந்து போகும்;
-ஆனால்,
உன்னைப்போல் சிலர் மறந்து போனால்,
மனசு இறந்து போகும்."
- உன் நினைவுடன்...

"கண்கள் திறக்கும் வரை கனவு நீடிக்கும், - என்
கண்கள் மூடும் வரை, உன் நினைவு நீடிக்கும்."






No comments:

Post a Comment