Tuesday, August 6, 2013

கழிவறை காவியம் - 2

 எனக்கு ஒரு நண்பன் உண்டு. அவன் பெயர் ராஜாராமன். நெடுங்கால பரிச்சயம். வயது நாற்பதை தாண்டிவிட்டது. பார்க்க வயது முப்பதை  தாண்டவில்லை எனும் தோற்றம். அசோக் நகர் பத்தாவது நிழற்ச்சாலையில் நான் தங்கி இருந்த பொது, என் வீட்டின் கழிவறையை அவசரமாக பயன்படுத்தும் ஒரு நிர்பந்தமான சூழ்நிலை அவனுக்கு. என் வீட்டு கழிவறை, மூன்றடி அகலமும் ஐந்தடி நீளமும் கொண்ட சிறிய சொர்க்கம். 

"0" வாட்ஸ் பல்பு வெளிச்சத்தில், மேற்கிந்திய கழிப்பான்,   2 தண்ணீர் குழாய் எல்லாம் ஒருங்கிணைந்த சிறிய கழிவறைக்குள் சென்றவன் அரைமணிநேரம் ஆகியும் வரவில்லை. கழிவறையை சொர்க்கமாக நினைக்கும் நான், கழிவறைக்குள் இருக்கும் அவனை தொந்தரவு செய்ய மனமில்லாமல் காத்திருந்தேன். கூடுதலாக 15 நிமிடம் கழிந்தபின், நிச்சயம் எந்த ஒரு மனிதனும் இந்நேரத்திற்குள் கழித்து இருக்க கூடும் என நினைத்து, கதவை மெதுவாக தட்டினேன்.

சத்தமே இல்லை....... ராஜா என்று சன்னமாக கூப்பிட்டேன். பதில் இல்லை ..... என்னவோ எதோ என்று பதறி....... "ராஜா........ ராஜா ......" என்று கூவிக்கொண்டே வேகமாக கதவை தட்டினேன்... " இருடா " என்று மெல்லிய சத்தம் கதவின் உட்புறத்தில் இருந்து கேட்டது...... ச்சே என்ன   மனிதன் இவன் என்று நொந்துகொண்டு கழிவறை வாசலிலேயே காத்து கிடந்தேன்...... தாழ்பாள் திறக்கும் சத்தம்..... அப்பாடா என்று நினைத்து கதவருகில் சென்றேன்..... ஆர்வமிகுதியில் நானே கதவை திறக்க முற்பட்டேன்.... அங்கே நான் கண்டகாட்சி...........


ராஜா ....... ஒரு துண்டை மடியில் போட்டுக்கொண்டு...... ஒரு கையால் தண்ணீர் குழாயை அடைத்தும்.... மறு கையால் கதவை பிடித்துகொண்டு..... ஐயோ... ராஜா.... என்ன ஆச்சி என்று கேட்டேன் .... "tap உடைஞ்சிடுச்சு தண்ணி லீக் ஆக ஆரம்பிச்சிடுச்சு..... என்ன பண்றதுன்னு தெரியல...... அதான்.....  இவ்வளவு  நேரம் யோசிச்சேன்..... சேரி..... கைய வச்சி.... tap அடைச்சிட்டு..... துண்ட  மெல போட்டுக்கிட்டு...  உன்ன கூப்டேன்..... தண்ணி waste ஆக கூடாதுல"  என்று சொன்னான்.......நானும் அவனது சிக்கன நடவடிக்கைக்காக..... அவனை பாராட்டி.... அந்த தர்மசங்கடமான சூழ்நிலையில் இருந்து அவனுக்கு விடுதலை  கொடுத்தேன்...........

அப்போ இவளவு நேரம் இவன் கழிவரைல உக்காந்துகிட்டு...... உடஞ்சிபொன குழாய்ய .... ஒரு கையால அடைச்சிகிட்டு.... இன்னொரு கையால ..... எல்லா வேலையையும் முடிச்சிட்டு...... துண்ட  எடுத்து மடியில போட்டுட்டு... என்ன கொடும ........ இவன எல்லாம் என்ன பண்ண..........?  

Monday, July 1, 2013

"கழிவறை காவியம் " - 1

அன்பு நண்பர்களே ,

கூகிள் மூலமாக தான் நான் எழுதுகிறேன், எழுத்து பிழைகள் எல்லாம் என்னுடைய அலட்சியத்தால் மட்டுமே வருவது..   :) சரியா,

உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும், என்னுடைய வேலை பல ஊர்களுக்கு  சென்று வரும் வாய்ப்பை எனக்கு தந்திருக்கிறது. என்னுடைய அனுபவத்தில் நான் கண்டவைகளை எழுதவே இந்த வலை தளம்.

 யாராலும் தவிர்க்க முடியாத, அதே சமயத்தில் அதிகம் பகிர்ந்துகொள்ளப்படாத , நான்கு சுவர்களுக்குள் இருக்கும் ஒரு உலகம் தான் கழிவறை. கழிவறையை நேசிக்கிறேன் என்று சொல்லும் பலரை நான் பார்த்திருக்கிறேன், அவர்களுக்கு, புதிய சிந்தனை வருவது கழிவறையில் தான் என்று ஊர் கேட்க சொல்லுவார்கள். நான் அடுத்த அடி எடுத்து வைக்கிறேன், நான் சந்தித்த கழிவறைகள், அங்கே எனக்கு தோன்றிய சிந்தனைகள், இன்னும் பல விஷயங்களை எழுதலாம் என்று நெடுநாளாய்  என்னுள்ளே  ஒரு எண்ணம். அதுவென் இங்கே நான் எழுத தொடங்கும் "கழிவறை காவியம் " 

அந்த உலகத்தில் நான் மட்டுமே இருக்கிறேன் என்பதே ஒரு இன்பம் தான்.

கழிவறை என்பது உன்னை நீயே பூட்டிக்கொள்ளும் சிறை 
உடல் கழிவுகளை மட்டும் அல்ல.. உள்ள கரைகளையும் கழித்துவிட கூடும்,
சிறந்த தனிமை என்பது காட்டில் கூட  கிடைக்காது... கழிவறையில் கிடைக்கும்,
கழிவறைக்குள் இருக்கும் கண்ணாடி தான் உன் மனசாட்சி.........

முடிந்த வரையில் எதையும் மறைக்காமல் எழுத முயற்சிக்கிறேன்....

Saturday, April 27, 2013

அவனுடைய காலை இப்படித்தான் விடிகிறது....


அவனுடைய காலை இப்படித்தான் விடிகிறது....
பழைய காதலி சொல்கிறாள்.... நான் நல்லா இருக்கேன் நீ ஒரு கல்யாணம் பண்ணு...
விழித்து கொள்கிறான்...
கைலி கலைந்து இருக்கிறது, இன்றும் தூக்கம் பத்தவில்லை.....

சுற்றி யாருமே இல்லை, சுதந்திரமாக முதலில் கழிவறை,
அவனது கழிவறை தனிமைகள் யாருக்குமே தெரிவதில்லை,
தன்னை போல் ஒருவனுக்கு ஒரு குருஞ்செய்தி..
இருவரும் இணைவது ஒரு சேட்டான் கடை டீ....
ஐந்து நிமிட தொலைகாட்சி செய்தி...மூன்று நிமிட முழு குளியல்,
மடிப்பில்லாமல் உடைகளை இஸ்திரீ போட்டு...இரண்டு நிமிடம் கழித்து அதை,
உடலில் போட்டு.... நேரம் பார்த்து துயரம் கொண்டு... காலணி மாட்டி,
கதவை சாத்தி.... கிளம்பும்போது.... அய்யோ...
பல் விளக்கவில்லையே என்று... பாய்ந்து கதவை திறந்து,
பட் என சட்டையை கழற்றி, சட் என்று பல் விளக்கி, மீண்டும் கிளம்பி,
வெளியே வந்த பின்..
நிஜமாகவே பழைய காதலி செல்பேசியில் அழைக்க...
அரைமணிநேரம்... பேசியதில் போனதே தெரியாமல்..
இன்னைக்கும் அலுவலகத்திற்கு
தாமதம்.....
என்ன வாழ்க்கை டா இது........