Tuesday, July 6, 2021

மருத்துவ தாகம்

என்று தணியும் உங்கள் மருத்துவ தாகம்?
என்று மடியும் உங்கள் பணமீட்டும் மோகம்?

முதலில் மருத்துவ படிப்பு தான் சிறந்தது என சொல்வதை ஆசிரியர்கள் நிறுத்த வேண்டும்

மருத்துவர்கள் இரண்டு வகைப்படுவர் 

1. அரசாங்க வேலை செய்துகொண்டு ஓய்வு நேரத்தில், சொந்த சிறு குறு தொழிலாக, சிகிசையகம் அமைத்து மருத்துவ பயிற்சி செய்வது.( மொள்ளமாரித்தனம்)

2. தனியார் நிறுவன வேலை அல்லது சொந்தத் தொழில், அதாவது பெருமுதலாளிகளின் கைக்கூலி அல்லது தானே முதலாளியாக தொழில் செய்வது. ( முடிச்சவுக்கித்தனம்) 

ஆக இவர்கள் யாரும் சேவை செய்வதில்லை.

மருத்துவ படிப்பு படிக்க அதீத அறிவு தேவை இல்லை என மருத்துவர்கள் ஒத்துக்கொள்கிற சூழ்நிலை தான்.

இங்கே எல்லாருக்கும் மருத்துவர் ஆக வேண்டும் என ஆசை.. காரணம்....

வேற என்ன? காசு தான்...

அரசாங்க மருத்துவருக்கு சம்பளம் அப்புறம்... சொந்த சிகிசையகம் மூலம் ஈட்டும் பணம், மருந்தகங்கள் மற்றும் ஆய்வகங்கள் தரும் தரகு ( கமிஷன்). என திசையெங்கும் கொட்டிக்கிடக்கும் செல்வம்.

தனியார் மைத்துவமனையில் வேலை செய்தால்... சம்பளம், ஊக்கத் தொகை, தரகு, சிறப்புச் சலுகைகள்.. மேற்படி, உருப்படி என ஏகப்பட்ட வழிகளில் கல்லா கட்டலாம். அதுவே மருத்துவமனை முதலாளியாக இருந்தால் கொள்ளை லாபம்.

மேற்சொன்ன அனைத்தில் பாதி, சட்டத்திற்கு புறம்பானது மீதி, நற்சமுதாயத்துக்கு எதிரானது.

மருத்துவத்துறை இவ்வாறு ஆகிப்போணதற்கு காரணம், அதிபுத்திசாலிகளை கண்டெடுத்த நுழைவுத்தேர்வு தான்.

எல்லாத் தொழிலும் லாபம் தர வேண்டுமெனில் .. நாட்டின் பொருளாதாரம் நன்றாக இருக்க வெண்டும்.

எல்லாரும் நலமுடன் வாழ வேண்டுமெனில், எல்லாத் தொழிலும் லாபம் தரவேண்டும்.

இல்லையேல் மருத்துவ தொழில் மட்டுமே இங்கே செழித்தோங்கும்.

முதலில் மருத்துவர்கள் அநியாயமாக பணம் சம்பாதிக்கும் வழிகளை அடைக்க வெண்டும். 

பிற தொழில்கள் நலிவடையாமல் இருக்க ஆவண செய்ய வேண்டும். 

தனித்திறமைகளுக்கு  ஆக்கமும், ஊக்கமும், உதவியும் செய்ய வெண்டும்.

மருத்துவக் கனவு என்பது பணத்தாசையே என அனைவரும் உணரவேண்டும். 

ஒரு லட்சம் கட்டி நீட் தேர்வுக்கு படிக்கும் மாணவன், பல கோடி சம்பாதித்தாலும் போதும் என்று நினைக்க மாட்டான்.. நினைக்கவும் முடியாது..

மருத்துவர் தின வாழ்த்துக்கள் 😂😂😂😂

Tuesday, August 6, 2013

கழிவறை காவியம் - 2

 எனக்கு ஒரு நண்பன் உண்டு. அவன் பெயர் ராஜாராமன். நெடுங்கால பரிச்சயம். வயது நாற்பதை தாண்டிவிட்டது. பார்க்க வயது முப்பதை  தாண்டவில்லை எனும் தோற்றம். அசோக் நகர் பத்தாவது நிழற்ச்சாலையில் நான் தங்கி இருந்த பொது, என் வீட்டின் கழிவறையை அவசரமாக பயன்படுத்தும் ஒரு நிர்பந்தமான சூழ்நிலை அவனுக்கு. என் வீட்டு கழிவறை, மூன்றடி அகலமும் ஐந்தடி நீளமும் கொண்ட சிறிய சொர்க்கம். 

"0" வாட்ஸ் பல்பு வெளிச்சத்தில், மேற்கிந்திய கழிப்பான்,   2 தண்ணீர் குழாய் எல்லாம் ஒருங்கிணைந்த சிறிய கழிவறைக்குள் சென்றவன் அரைமணிநேரம் ஆகியும் வரவில்லை. கழிவறையை சொர்க்கமாக நினைக்கும் நான், கழிவறைக்குள் இருக்கும் அவனை தொந்தரவு செய்ய மனமில்லாமல் காத்திருந்தேன். கூடுதலாக 15 நிமிடம் கழிந்தபின், நிச்சயம் எந்த ஒரு மனிதனும் இந்நேரத்திற்குள் கழித்து இருக்க கூடும் என நினைத்து, கதவை மெதுவாக தட்டினேன்.

சத்தமே இல்லை....... ராஜா என்று சன்னமாக கூப்பிட்டேன். பதில் இல்லை ..... என்னவோ எதோ என்று பதறி....... "ராஜா........ ராஜா ......" என்று கூவிக்கொண்டே வேகமாக கதவை தட்டினேன்... " இருடா " என்று மெல்லிய சத்தம் கதவின் உட்புறத்தில் இருந்து கேட்டது...... ச்சே என்ன   மனிதன் இவன் என்று நொந்துகொண்டு கழிவறை வாசலிலேயே காத்து கிடந்தேன்...... தாழ்பாள் திறக்கும் சத்தம்..... அப்பாடா என்று நினைத்து கதவருகில் சென்றேன்..... ஆர்வமிகுதியில் நானே கதவை திறக்க முற்பட்டேன்.... அங்கே நான் கண்டகாட்சி...........


ராஜா ....... ஒரு துண்டை மடியில் போட்டுக்கொண்டு...... ஒரு கையால் தண்ணீர் குழாயை அடைத்தும்.... மறு கையால் கதவை பிடித்துகொண்டு..... ஐயோ... ராஜா.... என்ன ஆச்சி என்று கேட்டேன் .... "tap உடைஞ்சிடுச்சு தண்ணி லீக் ஆக ஆரம்பிச்சிடுச்சு..... என்ன பண்றதுன்னு தெரியல...... அதான்.....  இவ்வளவு  நேரம் யோசிச்சேன்..... சேரி..... கைய வச்சி.... tap அடைச்சிட்டு..... துண்ட  மெல போட்டுக்கிட்டு...  உன்ன கூப்டேன்..... தண்ணி waste ஆக கூடாதுல"  என்று சொன்னான்.......நானும் அவனது சிக்கன நடவடிக்கைக்காக..... அவனை பாராட்டி.... அந்த தர்மசங்கடமான சூழ்நிலையில் இருந்து அவனுக்கு விடுதலை  கொடுத்தேன்...........

அப்போ இவளவு நேரம் இவன் கழிவரைல உக்காந்துகிட்டு...... உடஞ்சிபொன குழாய்ய .... ஒரு கையால அடைச்சிகிட்டு.... இன்னொரு கையால ..... எல்லா வேலையையும் முடிச்சிட்டு...... துண்ட  எடுத்து மடியில போட்டுட்டு... என்ன கொடும ........ இவன எல்லாம் என்ன பண்ண..........?  

Monday, July 1, 2013

"கழிவறை காவியம் " - 1

அன்பு நண்பர்களே ,

கூகிள் மூலமாக தான் நான் எழுதுகிறேன், எழுத்து பிழைகள் எல்லாம் என்னுடைய அலட்சியத்தால் மட்டுமே வருவது..   :) சரியா,

உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும், என்னுடைய வேலை பல ஊர்களுக்கு  சென்று வரும் வாய்ப்பை எனக்கு தந்திருக்கிறது. என்னுடைய அனுபவத்தில் நான் கண்டவைகளை எழுதவே இந்த வலை தளம்.

 யாராலும் தவிர்க்க முடியாத, அதே சமயத்தில் அதிகம் பகிர்ந்துகொள்ளப்படாத , நான்கு சுவர்களுக்குள் இருக்கும் ஒரு உலகம் தான் கழிவறை. கழிவறையை நேசிக்கிறேன் என்று சொல்லும் பலரை நான் பார்த்திருக்கிறேன், அவர்களுக்கு, புதிய சிந்தனை வருவது கழிவறையில் தான் என்று ஊர் கேட்க சொல்லுவார்கள். நான் அடுத்த அடி எடுத்து வைக்கிறேன், நான் சந்தித்த கழிவறைகள், அங்கே எனக்கு தோன்றிய சிந்தனைகள், இன்னும் பல விஷயங்களை எழுதலாம் என்று நெடுநாளாய்  என்னுள்ளே  ஒரு எண்ணம். அதுவென் இங்கே நான் எழுத தொடங்கும் "கழிவறை காவியம் " 

அந்த உலகத்தில் நான் மட்டுமே இருக்கிறேன் என்பதே ஒரு இன்பம் தான்.

கழிவறை என்பது உன்னை நீயே பூட்டிக்கொள்ளும் சிறை 
உடல் கழிவுகளை மட்டும் அல்ல.. உள்ள கரைகளையும் கழித்துவிட கூடும்,
சிறந்த தனிமை என்பது காட்டில் கூட  கிடைக்காது... கழிவறையில் கிடைக்கும்,
கழிவறைக்குள் இருக்கும் கண்ணாடி தான் உன் மனசாட்சி.........

முடிந்த வரையில் எதையும் மறைக்காமல் எழுத முயற்சிக்கிறேன்....

Saturday, April 27, 2013

அவனுடைய காலை இப்படித்தான் விடிகிறது....


அவனுடைய காலை இப்படித்தான் விடிகிறது....
பழைய காதலி சொல்கிறாள்.... நான் நல்லா இருக்கேன் நீ ஒரு கல்யாணம் பண்ணு...
விழித்து கொள்கிறான்...
கைலி கலைந்து இருக்கிறது, இன்றும் தூக்கம் பத்தவில்லை.....

சுற்றி யாருமே இல்லை, சுதந்திரமாக முதலில் கழிவறை,
அவனது கழிவறை தனிமைகள் யாருக்குமே தெரிவதில்லை,
தன்னை போல் ஒருவனுக்கு ஒரு குருஞ்செய்தி..
இருவரும் இணைவது ஒரு சேட்டான் கடை டீ....
ஐந்து நிமிட தொலைகாட்சி செய்தி...மூன்று நிமிட முழு குளியல்,
மடிப்பில்லாமல் உடைகளை இஸ்திரீ போட்டு...இரண்டு நிமிடம் கழித்து அதை,
உடலில் போட்டு.... நேரம் பார்த்து துயரம் கொண்டு... காலணி மாட்டி,
கதவை சாத்தி.... கிளம்பும்போது.... அய்யோ...
பல் விளக்கவில்லையே என்று... பாய்ந்து கதவை திறந்து,
பட் என சட்டையை கழற்றி, சட் என்று பல் விளக்கி, மீண்டும் கிளம்பி,
வெளியே வந்த பின்..
நிஜமாகவே பழைய காதலி செல்பேசியில் அழைக்க...
அரைமணிநேரம்... பேசியதில் போனதே தெரியாமல்..
இன்னைக்கும் அலுவலகத்திற்கு
தாமதம்.....
என்ன வாழ்க்கை டா இது........

Monday, December 5, 2011

பிறந்த வீடா... புகுந்த வீடா...

நான் பிறந்த வீட்டில் என்னை பற்றி பேசியவை....

அழகானவள்,
நல்ல பேசுறா,
அவ கண்ணுக்கே கொத்திகிட்டு போய்டுவானுங்க,
எத செஞ்சாலும் கரெக்டா செய்றா,
அவளுக்கு தெரியும்,
அவள மாறி வருமா?

நான் புகுந்த வீட்டில் என்னை பற்றி பேசியவை.....

கோண,
அதிகம் பேசுற,
கண்ண காட்டி மயக்குறா,
எதாவது கரெக்டா செய்ய தெரியுதா?,
ஒண்ணுமே தெரியல உனக்கு,
இவ என்னைக்கு மாறுவா?

எனக்கு தெரிஞ்ச ஒரு அக்கா சொன்னது....

கன்னித் தமிழ் .........

சிலருக்கு அபாரமான வசனத் திறமை உண்டு, அதை கவிதையாக்கி இங்கே எழுதுகிறேன்... இவை என் சிந்தனை அல்ல.....

"உன்னை நினைத்த பொது - என்
கண்ணிலிருந்து வெளியேறியது நீர்,
ஏன் என்று கேட்டபோது - உன்
காதலனே காரணம் என்றது கண்ணீர்,
இத்தனை அன்புடன் அவனிருக்கும்போது - எனக்கு
உன் கண்ணில் வேலை எதற்கு......"



"உன் மூச்சு காற்றில் காதல் சொல்வாய் என,
என்னை தீண்டும் தென்றலிடம்,
தேடுகிறேன் உன் மூச்சு காற்றை....
காத்திருக்கிறேன் நான் உனக்காக,
கரம் சேரும் நாளுக்காக."



" இப்போதெல்லாம் இதய சுமை அதிகமாகிவிட்டது,
என்னவனே- உடற்ப்பயிர்ச்சி செய்....."




" உன் விழி பார்வையால், என் உதடுகளை பூட்டினாய்,
உன் இதழ் சேவையால் என் உயிர் பூட்டை திறந்தாய்,
நீ அருகே வரும்போது நெஞ்சத்தில் அலை அடிக்கும்,
நீ தேகம் தொடும்போது நெஞ்சத்தில் தீ பிடிக்கும்"




ஒரு பெண்ணின் உணர்வுகளாக எழுதப்பட்ட இவையாவும், நிச்சயமாக அவளுடைய சிந்தனைகள். நான் இல்லை.... நான் இல்லை...

Saturday, October 8, 2011

தென்றல் காலங்கள்....

என்ன செய்தேன் நான், எனக்கு எதற்கு இந்த வரம்?
நான் உனக்கு மட்டும் தான் என்று நீ சொல்கிறாய்,

புள்ளியை சுற்றும் கோலம் போல என் சிந்தை முழுதும் உன் நினைவு,
கற்குவியலில் முத்தை போல் நீ என் வாழ்க்கையில்,

சாவதில் சந்தோசமில்லை என்பேன் நான்,

சாவதற்கு தைரியம் வேண்டும் என்கிறாய் நீ,




சந்தேகபடுகிறாய் என்பேன் நான்,




செத்துபோயவேடுவேன் என்கிறாய் நீ,




பிறர் உன்னை புகழ்ந்தால் , இருப்பு கொள்ளவில்லை எனக்கு,




பிறர் புகழ இருக்கிறாள் என்னவள் என்றென்ன சொல்கிறாய் நீ,




இச் என்ற ஒலி தொலை பேசியில் வந்தால்,




பட்டென்று குளிருதடி எனக்கு,




உன் குரலில் என் பெயர் கேட்டால்,




உச்சத்தை தொடுகிரதடி உணர்வு,




முத்தத்தால் உன்னை குளிப்பாட்ட,




சத்தியம் செய்யுதடி மனது,




உனது திடீர் மௌனங்கள், என்னை பைத்தியம் ஆக்கிவிடுகிறது,




உனது கோபங்களை பார்த்தால் நீ பைத்தியம் என்று தோன்றுகிறது,




உண்மையா பொய்யோ நீ பைத்தியம் என்பது,




உன்மேல் நான் பைத்தியம் என்பது உர்ஜிதமாகிவிட்டது,




unnaal வாழ்க்கை இனிக்கிறது எனக்கு,




பக்கத்தில் நீ இருந்தால் பத்திகொள்ளும் காதல் நெருப்பு,




கைக்கோர்த்து நடக்க நான் விரும்புகிறேன்,




கட்டிக்கொண்டு உறங்க நீ விரும்புகிறாய்,




வா என்று நீ சொல்லும்போது, சந்தோசமாய் இருக்கிறது,




நான் வருகிறேன் என்று பிரியும் போது உள்ளம் வலிக்கிறது,