பயணம் சுகமாய் இருக்க, சுமைகளை குறைத்துக்கொள்ளுங்கள். போகிறபோக்கில் கிடைப்பதை உண்டு நிம்மதியாய் தூங்கி, பயணத்தை சுகமானதாக்குங்கள்.
இப்படி தான் நான் ஒருமுறை சைதாபேட்டை யில் இருந்து பல்லாவரம் வரை நான் மின்சார ரயிலில் வந்து சேர்ந்தேன். ரயில் பாதை மேம்பாலத்தில் ஏறி வலதுபக்கம் திரும்பும் பொது, இடது பக்க தடுப்பின் அருகில் அறுபது வயது மூதாட்டி , சுருக்கு பை விற்பதை பார்த்தேன். எனது அம்மாச்சியின் இடுப்பில் எப்போதும் ஒரு சுருக்கு பை இருக்கும். அதில் நிச்சயமாய் பணமும் இருக்கும். சிறுவயதில் நான் அதை கேட்டு விளையாடி இருக்கிறேன். சதுரமான ஒரு பை, இரண்டு முனை கயிறுகளை இழுத்த உடன் , பை மூடிக்கொள்ளும்.
விதவிதமான நிறங்களில் , பட்டு போன்ற துணிகளில் சுமார் ஐம்பது சுருக்கு பைகள். எல்லாமே அழகாய் இருந்தது. தேர்ந்தெடுப்பது கடினம் தான். நீல நிற பட்டு போன்ற அந்த பை மிகவும் அழகாய் இருந்தது. முனை கயிறுகளில் சிவப்பு நிற சிறிய குஞ்சங்கள் இருந்தது. முனை கயிறுகள் வெள்ளை நிறம். பட்டு வண்ண குறுக்கு கோடுகள் பை முழுவதும் இருந்தது. இருபது ருபாய் கொடுத்து நான் அதை வாங்கினேன்.
பொதுவாக எனக்கு ஒரு பழக்கம் உண்டு. ஒரு பொருளை வாங்க வேண்டும் என்றால், அதற்கான பணத்தை எப்போதும் கையில் அல்லது வங்கியில் முன்னதாகவே வைத்துவிடுவேன். மிகவும் தரமாகவும் விலை குறைவாகம் அந்த பொருள் எப்போதாவது கிடைக்கும். அப்போது அதை வாங்கிவிடுவேன். ஆனால் சுருக்கு பையை வைத்து என்ன செய்வது. எந்த விதத்திலும் எனக்கு அதனால் பயனில்லை. என்னிடம் உள்ள சில ஏலேக்ட்ரோனிக் தகவல் செமிப்பாங்களை (pen drive) அதில் போட்டு மூடினேன். காலப்போக்கில் அது எனது வாழ்வில் ஒரு அங்கமாகவே மாறியது. மடி கணினி வாங்கிய பின் , எங்கு சென்றாலும் , எல்லாரும் அதை பார்த்து ஆச்சர்யப்பட்டார்கள் ( மனதிற்குள் கேலி செய்தார்கள்) நான் அதை என் இருப்பிற்கு அத்தாட்சியாகவே நினைத்தேன். ஒரு நாள் இரவு ஹோஸ்பெட் நகரின் பிரியதர்ஷினி ஹோடேலில் , தூங்கி விழிக்கும் பொது ஒரு குரங்கின் கையில் என்னுடைய சுருக்குப்பையை பார்த்தேன்.
கிஷ்ணதேவராயரின் தலைநகரமாக ஒருகாலத்தில் இருந்தது ஹம்பி. ஹம்ப்யில் இருந்து பதினைந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு நகரம் தான் ஹோஸ்பெட். துங்கபத்ரை நதி கரையில் , ஏராளமான கனிம வளங்களை தன்னுள் கொண்ட இந்த நகரத்தில், குரங்குகளும் நிறைய உண்டு. இப்போது ஹம்பி வெறும் மணல் மேடு.
அது மிகச்சிறிய குரங்கு. ஜன்னல் கம்பியில் இருந்த ஒரு கால் சதுர இடைவெளியில், எனது அரைக்குள் நுழைந்த அது திரும்ப எத்தனிக்கும் பொது கண்ணாடி கோப்பையில் வால் பட்டதால் , கோப்பை தவறி விழ நான் விழித்துக்கொண்டேன். அதை மாத்திரம் எடுக்காதே என்று கத்திக்கொண்டே , வாரி சுருட்டிக்கொண்டு எழுந்தேன். என்னை பார்த்த வேகத்தில் வந்த வழியே அது திருமபிசென்றது. அதன் கையில் எனது நீல வண்ண சுருக்கு பை.
ஒரு டீ ஷர்ட் ஐ , மாட்டிக்கொண்டு கதவை கூட சாத்தாமல், படிக்கட்டில் இறங்கி ஓடினேன். நான் இருந்தது இரண்டாவது மாடி. ஹோட்டலுக்கு அருகில் இருத்த களாக்காய் மரத்திலிருந்து குரங்கு வந்திருக்கலாம். ஹோட்டல் வாசலில் இருந்த செக்யூரிட்டி இடம் , பந்தர்... பந்தர்...என்றபடி மரத்தின் அருகில் ஓடினேன். கன்னடத்தில் குரங்கிற்கு என்ன என்பது எனக்கு தெரியாது. தேசிய மொழியில் சொன்னதால் செக்யூரிட்டி புரிந்து கொண்டான். ஹோட்டல் சிப்பந்திகளும், வேறு சிலரும் கன்னடத்தில் பலவாறு பேசிக்கொண்டிருந்தார்கள். எனுரே என்று சிலர் என்னை கேட்டபோது, தெரிந்த கொஞ்சநஞ்ச கன்னடமும் மறந்து போனது. " பந்தர், மேரா பர்ஸ் " இதை தவிர மற்றதெல்லாம் செய்கையில் சொல்லி ஒரு வழியாய் அவர்களுக்கு புரியவைத்தேன்.
உதவவந்தவர்களில் ஒருவன் கைகளை தட்டி குரங்கினை விரட்ட முயற்சி செய்தான். எனக்கோ ஒரே நடுக்கம், குரங்கு கண்ணை விட்டு விலகி சென்று விட்டதானால் என்ன செய்வது. அந்த குட்டிக்குரங்கு மரத்தின் கிளையில் அமர்ந்திருந்தது. அதன் கையில் எனது சுருக்குப் பை. அந்த நேரம் பார்த்து எனது முதுகிற்கு பின்னே பயங்கர வெடிச் சத்தம். செக்யூரிட்டி , கையில் ஐந்தாறு வெடிகளோடு நின்று கொண்டிருந்தான். எனக்கு சுருக்குப் பை திரும்ப கிடைக்கும் என்ற நம்பிக்கை போய்விட்டது.
வெடிச்சத்தம் கேட்டு அரைமணி நேரம் சென்ற பிறகு, முதல் முறையாக, மரத்தின் மேலிருந்து, ஒரு தகவல் பலகை விழுந்தது. அதில் குரங்கின் பல் தடம் பதிந்திருந்தது. மூன்று மணிநேர காத்திருப்பிற்கு பின்னால் எ னது கையில் எல்லா தகவல் செமிப்பாங்களும் இருந்தது. எல்லா வற்றிலும் குரங்கு , தன பல்லின் தடத்தை பதித்திருந்தது. நான் மரத்தின் அடியில் இருந்த திண்டில் அமர்ந்தேன். சுருக்குப் பையை திறக்க குரங்கிற்கு எப்படி தெரிந்தது? ஒருவேளை அதை குரங்கு கிழித்திருக்கலாம்.
உதவவந்தவர்களில் ஒருவன் கைகளை தட்டி குரங்கினை விரட்ட முயற்சி செய்தான். எனக்கோ ஒரே நடுக்கம், குரங்கு கண்ணை விட்டு விலகி சென்று விட்டதானால் என்ன செய்வது. அந்த குட்டிக்குரங்கு மரத்தின் கிளையில் அமர்ந்திருந்தது. அதன் கையில் எனது சுருக்குப் பை. அந்த நேரம் பார்த்து எனது முதுகிற்கு பின்னே பயங்கர வெடிச் சத்தம். செக்யூரிட்டி , கையில் ஐந்தாறு வெடிகளோடு நின்று கொண்டிருந்தான். எனக்கு சுருக்குப் பை திரும்ப கிடைக்கும் என்ற நம்பிக்கை போய்விட்டது.
வெடிச்சத்தம் கேட்டு அரைமணி நேரம் சென்ற பிறகு, முதல் முறையாக, மரத்தின் மேலிருந்து, ஒரு தகவல் பலகை விழுந்தது. அதில் குரங்கின் பல் தடம் பதிந்திருந்தது. மூன்று மணிநேர காத்திருப்பிற்கு பின்னால் எ னது கையில் எல்லா தகவல் செமிப்பாங்களும் இருந்தது. எல்லா வற்றிலும் குரங்கு , தன பல்லின் தடத்தை பதித்திருந்தது. நான் மரத்தின் அடியில் இருந்த திண்டில் அமர்ந்தேன். சுருக்குப் பையை திறக்க குரங்கிற்கு எப்படி தெரிந்தது? ஒருவேளை அதை குரங்கு கிழித்திருக்கலாம்.
அறைக்கு வந்து முதல் வேலையாக ஜன்னலை மூடினேன். குட்டி குரங்கின் செய்கைகளை நினைத்தபோது, எனக்கு கலைஞரின் ஐந்து வருட ஆட்சி காலம் தான் நினைவுக்கு வந்தது. எனக்கு சொந்தமான பணத்தையே , ஒரு ருபாய் அரிசியாகவும், வானுயர்ந்த மேம்பாலங்கலாகவும், தொலைகாட்சிப் பெட்டி யாகவும் , தனது பெயரில் தந்த இவருக்கும் . பல் தடம் பதித்து தந்த குட்டி குரங்கிற்கும் , என்ன வித்யாசம்??? சுருக்குப் பை எது என்பதும், ஜன்னல் எது என்பதும் உங்களுக்கு புரிகிறதா????