Tuesday, October 26, 2010

குரங்கின் பிடியில் .......

சைதாபேட்டையில் இருந்து பல்லாவரம் வரை செல்ல மின்சார ரயில் பயணம் சுகமானது தான். நமது பயணம் சுகமாக இருப்பது நமது கையில் உள்ளது, நமது கையில் உள்ளவைகளில் உள்ளது. எனது உடன் பயணிப்பவர்களை நான் எப்போதும் கவனித்துக்கொண்டே இருப்பேன். நிச்சயமாக அது ஒரு இரவு ரயில் பயணமாக தான் இருக்கும். இருந்தாலும் ஒரு போர்வை, ஊதினால் உருவாகும் தலையணை , மெத்தை விரிப்பு, கட்டு சாதம் என்று ஒரு ப்ரீ சைஸ் பயண பை அவர்களுடன் வரும். ஒருவேளை ஒரு குடும்பம் என்றால் நிச்சயம் நாலு பைகள் அதிலும் ஒரு குழந்தை இருந்தால் ஏழு பைகள். அப்பா, பையை தூக்குவதிலும், பாதுகாப்பதிலும் , பயணத்தின் சுகம் போய்விடும்.
பயணம் சுகமாய் இருக்க, சுமைகளை குறைத்துக்கொள்ளுங்கள். போகிறபோக்கில் கிடைப்பதை உண்டு நிம்மதியாய் தூங்கி, பயணத்தை சுகமானதாக்குங்கள்.
இப்படி தான் நான் ஒருமுறை சைதாபேட்டை யில் இருந்து பல்லாவரம் வரை நான் மின்சார ரயிலில் வந்து சேர்ந்தேன். ரயில் பாதை மேம்பாலத்தில் ஏறி வலதுபக்கம் திரும்பும் பொது, இடது பக்க தடுப்பின் அருகில் அறுபது வயது மூதாட்டி , சுருக்கு பை விற்பதை பார்த்தேன். எனது அம்மாச்சியின் இடுப்பில் எப்போதும் ஒரு சுருக்கு பை இருக்கும். அதில் நிச்சயமாய் பணமும் இருக்கும். சிறுவயதில் நான் அதை கேட்டு விளையாடி இருக்கிறேன். சதுரமான ஒரு பை, இரண்டு முனை கயிறுகளை இழுத்த உடன் , பை மூடிக்கொள்ளும்.
விதவிதமான நிறங்களில் , பட்டு போன்ற துணிகளில் சுமார் ஐம்பது சுருக்கு பைகள். எல்லாமே அழகாய் இருந்தது. தேர்ந்தெடுப்பது கடினம் தான். நீல நிற பட்டு போன்ற அந்த பை மிகவும் அழகாய் இருந்தது. முனை கயிறுகளில் சிவப்பு நிற சிறிய குஞ்சங்கள் இருந்தது. முனை கயிறுகள் வெள்ளை நிறம். பட்டு வண்ண குறுக்கு கோடுகள் பை முழுவதும் இருந்தது. இருபது ருபாய் கொடுத்து நான் அதை வாங்கினேன்.
பொதுவாக எனக்கு ஒரு பழக்கம் உண்டு. ஒரு பொருளை வாங்க வேண்டும் என்றால், அதற்கான பணத்தை எப்போதும் கையில் அல்லது வங்கியில் முன்னதாகவே வைத்துவிடுவேன். மிகவும் தரமாகவும் விலை குறைவாகம் அந்த பொருள் எப்போதாவது கிடைக்கும். அப்போது அதை வாங்கிவிடுவேன். ஆனால் சுருக்கு பையை வைத்து என்ன செய்வது. எந்த விதத்திலும் எனக்கு அதனால் பயனில்லை. என்னிடம் உள்ள சில ஏலேக்ட்ரோனிக் தகவல் செமிப்பாங்களை (pen drive) அதில் போட்டு மூடினேன். காலப்போக்கில் அது எனது வாழ்வில் ஒரு அங்கமாகவே மாறியது. மடி கணினி வாங்கிய பின் , எங்கு சென்றாலும் , எல்லாரும் அதை பார்த்து ஆச்சர்யப்பட்டார்கள் ( மனதிற்குள் கேலி செய்தார்கள்) நான் அதை என் இருப்பிற்கு அத்தாட்சியாகவே நினைத்தேன். ஒரு நாள் இரவு ஹோஸ்பெட் நகரின் பிரியதர்ஷினி ஹோடேலில் , தூங்கி விழிக்கும் பொது ஒரு குரங்கின் கையில் என்னுடைய சுருக்குப்பையை பார்த்தேன்.

கிஷ்ணதேவராயரின் தலைநகரமாக ஒருகாலத்தில் இருந்தது ஹம்பி. ஹம்ப்யில் இருந்து பதினைந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு நகரம் தான் ஹோஸ்பெட். துங்கபத்ரை நதி கரையில் , ஏராளமான கனிம வளங்களை தன்னுள் கொண்ட இந்த நகரத்தில், குரங்குகளும் நிறைய உண்டு. இப்போது ஹம்பி வெறும் மணல் மேடு.

அது மிகச்சிறிய குரங்கு. ஜன்னல் கம்பியில் இருந்த ஒரு கால் சதுர இடைவெளியில், எனது அரைக்குள் நுழைந்த அது திரும்ப எத்தனிக்கும் பொது கண்ணாடி கோப்பையில் வால் பட்டதால் , கோப்பை தவறி விழ நான் விழித்துக்கொண்டேன். அதை மாத்திரம் எடுக்காதே என்று கத்திக்கொண்டே , வாரி சுருட்டிக்கொண்டு எழுந்தேன். என்னை பார்த்த வேகத்தில் வந்த வழியே அது திருமபிசென்றது. அதன் கையில் எனது நீல வண்ண சுருக்கு பை.

ஒரு டீ ஷர்ட் ஐ , மாட்டிக்கொண்டு கதவை கூட சாத்தாமல், படிக்கட்டில் இறங்கி ஓடினேன். நான் இருந்தது இரண்டாவது மாடி. ஹோட்டலுக்கு அருகில் இருத்த களாக்காய் மரத்திலிருந்து குரங்கு வந்திருக்கலாம். ஹோட்டல் வாசலில் இருந்த செக்யூரிட்டி இடம் , பந்தர்... பந்தர்...என்றபடி மரத்தின் அருகில் ஓடினேன். கன்னடத்தில் குரங்கிற்கு என்ன என்பது எனக்கு தெரியாது. தேசிய மொழியில் சொன்னதால் செக்யூரிட்டி புரிந்து கொண்டான். ஹோட்டல் சிப்பந்திகளும், வேறு சிலரும் கன்னடத்தில் பலவாறு பேசிக்கொண்டிருந்தார்கள். எனுரே என்று சிலர் என்னை கேட்டபோது, தெரிந்த கொஞ்சநஞ்ச கன்னடமும் மறந்து போனது. " பந்தர், மேரா பர்ஸ் " இதை தவிர மற்றதெல்லாம் செய்கையில் சொல்லி ஒரு வழியாய் அவர்களுக்கு புரியவைத்தேன்.

உதவவந்தவர்களில் ஒருவன் கைகளை தட்டி குரங்கினை விரட்ட முயற்சி செய்தான். எனக்கோ ஒரே நடுக்கம், குரங்கு கண்ணை விட்டு விலகி சென்று விட்டதானால் என்ன செய்வது. அந்த குட்டிக்குரங்கு மரத்தின் கிளையில் அமர்ந்திருந்தது. அதன் கையில் எனது சுருக்குப் பை. அந்த நேரம் பார்த்து எனது முதுகிற்கு பின்னே பயங்கர வெடிச் சத்தம். செக்யூரிட்டி , கையில் ஐந்தாறு வெடிகளோடு நின்று கொண்டிருந்தான். எனக்கு சுருக்குப் பை திரும்ப கிடைக்கும் என்ற நம்பிக்கை போய்விட்டது.
வெடிச்சத்தம் கேட்டு அரைமணி நேரம் சென்ற பிறகு, முதல் முறையாக, மரத்தின் மேலிருந்து, ஒரு தகவல் பலகை விழுந்தது. அதில் குரங்கின் பல் தடம் பதிந்திருந்தது. மூன்று மணிநேர காத்திருப்பிற்கு பின்னால் எ னது கையில் எல்லா தகவல் செமிப்பாங்களும் இருந்தது. எல்லா வற்றிலும் குரங்கு , தன பல்லின் தடத்தை பதித்திருந்தது. நான் மரத்தின் அடியில் இருந்த திண்டில் அமர்ந்தேன். சுருக்குப் பையை திறக்க குரங்கிற்கு எப்படி தெரிந்தது? ஒருவேளை அதை குரங்கு கிழித்திருக்கலாம்.

அறைக்கு வந்து முதல் வேலையாக ஜன்னலை மூடினேன். குட்டி குரங்கின் செய்கைகளை நினைத்தபோது, எனக்கு கலைஞரின் ஐந்து வருட ஆட்சி காலம் தான் நினைவுக்கு வந்தது. எனக்கு சொந்தமான பணத்தையே , ஒரு ருபாய் அரிசியாகவும், வானுயர்ந்த மேம்பாலங்கலாகவும், தொலைகாட்சிப் பெட்டி யாகவும் , தனது பெயரில் தந்த இவருக்கும் . பல் தடம் பதித்து தந்த குட்டி குரங்கிற்கும் , என்ன வித்யாசம்??? சுருக்குப் பை எது என்பதும், ஜன்னல் எது என்பதும் உங்களுக்கு புரிகிறதா????

Saturday, October 23, 2010

பறந்த மனம் ..........

".................... ஆகிய நீங்கள், ...................... ஆகிய குணவதியை, திருமணம் செய்துகொள்ள, உங்களுக்கு சம்மதமா?" மனம் இல்லை என்று சொல்கிறது ஆனால் வாய் மூடியே இருக்கிறது. சட்டேன்று உடலை விட்டு மனம் வெளி செல்ல முயல்கிறது. காதுகள் கருப்பானாலும் சிவக்கின்றன. பொய்சொல்வது , அவ்வளவு கடினமில்லை. ஆனால் , அதை நினைவில் வைத்துக்கொண்டு, பின் ஒருமுறை , அல்லது பல முறை முன் சொன்னது பொய் அல்ல என்பதற்காய் பல நூறு முறை பொய் சொல்ல வேண்டியதாகிவிடுமே?


உண்மைக்கு பலமே கிடையாது. ஏனென்றால் , எல்லா உண்மையும் ஒரே பொய்யினால் பொய்யாகக்கூடுமே. எல்லா பிரச்சனைகளுக்கும் முடிவுகள் சாஸ்வதமாக அமைவதில்லை. ஆனால் எல்லா முடிவுகளும் யாரவது ஒருவருக்கு பிரச்சனையாகதான் முடிகிறது. சமரச முயற்சிகள் எல்லாம் தோல்வி அடைவதில்லை. ஏனென்றால் தோல்வி என்பதே ஒரு சமரசம் தான். ஒருவேளை நான் தோற்றுவிட்டேனோ? ஆம் என்று நினைத்தால் நான் சமரசவாதி, இல்லை என்று நினைத்தால் நான் தீவிரவாதி. தீவிரம் காட்ட வீரம் வேண்டுமா? விவேகம் வேண்டுமா? .............................ஆகிய நீங்கள் .......... ஆகிய குணவதியை திருமணம் செய்துகொள்ள உங்களுக்கு சம்மதமா?


நன்றாக வளர்ந்து நின்றுகொண்டிருக்கும், ஒரு அரச மரத்தில் நிறைய காகங்கள் கூடுகட்டி வாழ்கின்றன. அரசமரங்கள் அதிகமாக காணப்படுவதில்லை . நான் என்னுடைய வயதிற்கு (இருபத்தி ஒன்பது ) ஒருமுறை கூட அது பூத்து பார்த்தது கிடையாது. பின் எப்படி மகரந்தம் பரவும்? அரசமரத்தில் கனிகளை யாராவது பார்த்திருக்கிறீர்களா? பின் எப்படி விதை உருவாகும்? எனது நண்பர் செல்லபாண்டியன் சொல்கிறார், அரசமரம் , தான் விரும்பிய இடத்தில தானாய் வளரும் என்று. இது உண்மையா? என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் இயற்கையின் தன்னிரைவட்டதுள் அடங்காததாகவே அரசமரம் வாழ்கிறது. ஒருவேளை அது அப்படி இருப்பதால் தான் அதற்க்கு மதிப்பு அதிகமாக இருக்கிறதோ ?

பூக்கள் மலர்கின்றது, தன்னுள் அது தேன் கொண்டிருக்கிறது. தேன் ஒரு கையூட்டு , மகரந்த பொதி சுமக்க. கையூட்டு பலன் தருவது காலத்தின் கைகளில். விதைக்கும் கணிக்கும் வித்தான தேன் தான் இளமை. இவையாவும் இயற்க்கை. இது யாருடைய முடிவாலும் நடப்பதில்லை. ............................. ஆகிய நீங்கள் .............. ஆகிய குணவதியை திருமணம் செய்துகொள்ள உங்களுக்கு சம்மதமா?



பாதிரியார் ஒருமுறை கேட்ட குரல் பலமுறை செவிப்பறையை சுற்றுகிறது. பஸ்ஸில் செல்லவேண்டுமெனில் ஓட்டுனரை நம்பவேண்டும். இரயிலில் இது சற்று மாறுகிறது. ஓட்டுனர் நம் கண்ணில் படுவதில்லை. ஆனால் நம்ப வேண்டும். விமானத்தைஎல்லாம் இப்போது கம்ப்யூட்டர் தான் ஒட்டுகின்றதாம். இங்கே யாரை நம்புவது?

முதலில் நான் கால்பந்தாட்ட வீரனாக நினைத்தேன்.பீ டி மாஸ்டர் சொன்னவுடன் வேகமாக பந்தை காலால் ஏத்தினேன். என்னை சிலருடன் சேர்ந்து நிற்க சொன்னார். பின்னர் எங்கள் அனைவரையும் தகுதியற்றவர் என்று வெளியேற்றிவிட்டார். நான் உடனே ஹாக்கிக்கு மாறினேன். ரைட் அவுட் பொசிசனில் விளையாடினேன். முதல் மேட்ச் விளையாட போகும் பொது ஹாக்கி மாஸ்டர் என்னை புறம்தள்ளி வேறு ஒருவனை ஆடவைத்தார். " மனம் தானாய் ஹாக்கி வேண்டாம் என்று சொல்ல, கூடை பந்து விளையாட சென்றேன். பனிரெண்டாம் வகுப்பு வந்துவிட்டதால் மனம் படிக்கலாமே என்று அலாரம் அடித்தது. நடுவில் கொஞ்ச நாள் இசை கருவிகளை வாசிக்க கற்றுக்கொண்டேன். இப்போது எல்லாம் மறந்து போய்விட்டது. இவை எல்லாம் வாழ்கையில் என்முன் வந்த பிரச்சனைகளை முடிவுக்கு கொண்டுவர நான் செய்துகொண்ட சமரசத்தில் விளைவுகளே. பாதிரியார் மீண்டும் ஒருமுறை கேட்டார் , ஆனால் வித்தியாசமாக "...................... ஆகிய நீங்கள் ...................... ஆகிய குணவானை திருமணம் செய்துகொள்ள உங்களுக்கு சம்மதமா?" நான் பதில் சொன்னதாக பாதிரியார் நினைத்து விட்டாரோ? அதனால் அருகில் நிற்கும் மணப்பெண்ணை கேட்கிறாரோ? இப்போதும் மனது மாத்திரம் தான் இல்லை என்கிறது. வாய் மூடியே இருக்கிறது.

சடங்குகள் எல்லையை கடந்துவிட்டது. இருந்த ஒரே ஒரு வாய்ப்பும் போய் விட்டது. இனி இவள் தான் , இன்பம், துன்பம், கஷ்ட்டம், நஷ்ட்டம் என்று நான் நினைத்துகொள்ளும் எல்லாவற்றிலும் கூடவரும் வழிபயணி.

கேள்விகள் முடியவில்லையோ? பாதிரியார் சர்ச் இல் கூடி இருந்த அனைவரையும் பார்த்து, "இங்கு கூடி இருக்கும் உங்களில் யாரவது, இந்த திருமணத்தில் இவர்கள் இருவரும் இணைய கூடாத நியாயமான காரணம் எதுவாகிலும் உண்டென்றால் இப்போது கூறலாம் "என்றார். ஜன்னல் வழியே தெரியும் அரசமரம் சொல்வது எனக்கு மட்டுமே கேட்டது. பாதிரியார் " இனி ஒருவனும் ஒருக்காலும் ஒன்றும் சொல்லாதிருக்க கடவன் " என்றார். நான் எனது மனதை பார்த்தேன்.

மனது அரசமரத்தில் ஊஞ்சல் ஆடிக்கொண்டிருந்தது. அநேகமாக அது திரும்பிவராது. ஏன் என்றால் மனதால் பேசாமல் இருக்க முடியாதல்லவா?

Monday, August 23, 2010

பிரமிள் எழுதியது ..........

பிரமிள் எழுதியவற்றின் தொகுப்பை வாசித்து கொண்டிருக்கிறேன்...

நான்கு பக்கத்தை முடிக்கும் முன்னே பல சிந்தனைகள்... அதில் ஒன்றை இங்கே தருகிறேன்.

காலை எழுந்து - நல்ல,
காப்பி குடித்து;
மனைவியுடன் பேசி - உன்
குழந்தைகளை கொஞ்சி;
எல்லாரிடமும் விடைபெற்று ,
ஆபிஸ் சென்றுவிட்டு,
மனைவிக்கு மல்லிகையும்,
குழந்தைகளுக்கு தின்பண்டமும்;
கையில் எடுத்து வீட்டுக்கு வரும்போது ,
வீடே இல்லையென்றால் எப்படி இருக்கும்?

மரங்களை வெட்டாதே !
பறவைகள் பாவம்..........

நாலு பக்கம் படிச்சதுக்கே எனக்கு இவ்வளவு சிந்தனை என்றால், முழுவதும் படித்தால்?
படித்த பின் எழுதுகிறேன்..........

Sunday, August 15, 2010

நண்பன் மணிகண்டன் சொன்னது.....

எனக்கு இப்போ பசிக்குது ........
எனக்கு தெரியும் ..
என்னோட பசி இன்னொருவனுடைய பசியை போக்குது...

யோசிப்போம் ................

Thursday, August 5, 2010

இரவின் இரவல்கள்.....

நேற்றிரவு நான் எழுதியவைகளை இங்கே தருகிறேன் ...... இவைகள் நிச்சயமாக இரவின் இரவல்களே.......

"சிந்திக்கும் வேளையெல்லாம்,
சந்தத்தின் தேன்துளிகள் ,
சந்தித்த காலங்களை;
எண்ணி தணியும் நீர் குமிழ்கள் ;
எண்ணி துணிக கருமம் - என
ஏன் சொன்னான் அந்த கவி,
கருமம் ;
எண்ணுவதற்கே சிலர்கில்லை துணிவு;
மன ஏக்கம் தணிவது எப்போது?"

"பண்ணிய பாவமேல்லாம்,
பலன் தருகிறதோ இப்போது?
பரதேசி என நான்,
புறம் நாடுவதில் தப்பேது?

"சிறகொடிந்த பறவையென ,
சிவனே என்றிருந்தாலும் ;
மலை மேல் குடில் போலா,
உன் மடி சேர்வது?

"கவிதாயினி உன் மேல் பித்தம் கொண்டே
கவி தாகங்கள் சொல்வேன் பெண்டே "

கொடிபோல மேல் சாயும் உன்னை - இடை
தூக்கி இச்சிட இன்பம் அல்லோ ?
நீ தாங்கும் பூக்கள் மலர்ந்தாட - என்
கரந்தன்னின் காரியங்கள் போதாதோ?
செவி கேட்கும் செய்தியெல்லாம் - நீ
உச்சியில் சப்திக்கும் என் பேரோ ?
உன் விழி எனை தீண்டும் சிலநேரம் - அது
இதய நச்சு நீக்கும் சவுக்காரம்
நான் இச்சித்தவைகளை மறைத்து - எனை
பச்சையாய் காட்டி கொடுத்தாய் என்னிடமே.
ஐயோ இவை யாவும் துச்சம் - என்னும்
சித்தம் என்னுள் இல்லையே பராபரா
வெட்கம் வெட்கம் வெட்கம் - காம
வேட்கை மீள்வது நரகம்.

"நித்தம் நினைபதுண்டு பெண்ணே - உன்னை
நேசிப்பது எதனால் என்று "
பட்டென கண்ணில் படும் - உன்
கூட்டின் வடிவங்களா?
மங்கையர் சிலர்க்கே வாய்க்கும் - விழி
வீச்சின் சிதறல்களா?
தூரத்திலும் நெருப்பாய் சுடும் - பல
வெப்ப பேச்சுகளா?
சாமத்தில் எனை சேரும் - நின்
சங்கம நுட்பங்களா?
இல்லை இல்லை இவை - யாவும்
என் வேட்கை தணிக்கும் குளிர் நீரா?

அறியேன் அறியேன் அறியேன்............

இரவின் தனிமை இன்னும் கிடைத்தால்....
இது போல் சிலவை இன்னும் இன்னும் ;
பதிவேறும்.........





Tuesday, July 27, 2010

எஸ் எம் எஸ் கவிதைகள்....

எனக்கு வந்த .... அல்லது யாரோ.... யாருக்காகவோ வரைந்த குறுஞ் செய்திகள்

"பூக்கள் இல்லாததால்!
நகரத்தில்;
வண்ணச் சட்டைகளை,
வட்டமிடுகிறது;
பட்டாம்பூச்சி."

அடுத்தது...


"உன் உள்ளம் நேசிப்பதை நீ மறந்துவிடலாம் ;
ஆனால் ,
உன்னை நேசித்த உள்ளத்தை மட்டும்;
உன்னால் மறக்க முடியாது."

இது உண்மையா என்ன?
அடுத்தது....

நீ ஒளித்து வைத்திருந்தவைகளை;
எனக்குக் காட்டி,
அவை உனக்குத்தான் சொந்தம் என்றாய்.
என் இதயத்தை காணவில்லையே ,
அதை நீ ஏன் மறைத்தாய்?




இதற்கு என்ன அர்த்தம் ???? என்னத்த பாத்தாங்க? எத காட்டுனாங்க?

"குற்ற உணர்வு என்னை கொல்லுதடி தோழி,
காய்த்த மரமென்று உன் மேல்
கல் எறிகிறார் கயவர் ,
சோற்றில் உப்பிடவில்லை உன்னை ,
சொன்ன சொல் கேட்டு,
காட்டில் விட்டேனே உன் கண்ணை கட்டிவிட்டு."

இது நல்லா இருக்கா?

இதுபோல பல கவிதைகளை நான் அனுப்பும் பொது பதில் தருவது வெகுசிலரே. அந்த பதில்கள் எல்லாம் எப்படி இருக்கும் என்பதற்கு என் நண்பன் புகழேந்தி அனுப்பிய ஒரு எஸ் எம் எஸ் ஐ எடுத்துகாட்டாக இங்கே தருகிறேன்

"எதுகை மோனை ,
எதுக்குடா கேனை ;
குருன் தகவல் அனுப்பி,

கொலை செய்கிறாய் என்னை .... "

Saturday, June 26, 2010

நீ ஏன் காதலிக்கிறாய்?....

நேற்று என்னுடைய நண்பன் அருண் என்னை பார்த்து கேட்ட கேள்வி இது.....



அருண் நன்கு படித்தவர், ஒருமணிநேரம் அவருடன் நேரம் செலவிட்டால், ஏதாவது ஒன்றை பற்றி நம்மை சிந்திக்க வைத்துவிடுவார். ஆனால் இது அவருடைய கேள்வி இல்லை. நேற்று முன்தினம், இரவு கல்லாறு கலகலப்பு முடிந்ததும், என்னை அருணுடைய வீட்டிற்கு தான் அழைத்து சென்றார்கள். அப்போது நான் தான் அருணிடம் இந்த கேள்வியை கேட்டிருக்கிறேன். அருண் அப்போது எந்த பதிலும் சொல்லவில்லை. ஆனால் மறுநாள் மறக்காமல் என்னை அதே கேள்வியை கேட்டிருக்கிறார்.



நாங்கள் அமர்ந்திருந்தது, கோவை பாலாஜி இன்டர்நேஷனல் ஹோட்டல் லை சார்ந்த மை பார் என்ற மது விடுதியிலே. " இந்த கேள்விக்கு ஒரு பேக் முடிந்தவுடன் பதில் சொல்லவா என்றேன் நான்.

தமிழ் கூறும் நல்லுலகில், சொந்த கருத்துகளை சொல்வதில் நிறைய பிரச்சனைகள் இருக்கின்றன. சர்ச்சைக்குரிய விஷயங்களை குறித்து பேசுவதே பல சங்கடங்களை ஏற்படுத்திவிடுகிறது. ஆனால் அருண் எதுவும் சொல்லவில்லை என்னுடைய பதிலை கேட்டு.



பதில் இது தான்....

மனித வழக்கை ஒரு வட்டம்.. குழந்தையாக இருந்த பொது, சுற்றமும் அது தரும் சுகமும் அலாதியானது. ஒருநாள் நாம் தினமும் சந்திக்கும் ஒருவரை பார்க்க முடிய வில்லை என்றால் வருத்தமாகிவிடும். தாயின் சத்தம் சிறுது நேரம் கேட்கவில்லை என்றாலும் அழுகை வந்து விடும். நம்மை பார்க்கும் எல்லாரும் சிரித்து கொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்போம். இந்த வட்டம் பள்ளி செல்லும் பொது சற்றே விரிவடைகிறது ஆனால் சுற்றம் வேண்டும். கல்லூரியில் மாறுகிறது,

நம்முடைய நட்பு மேம்படுகிறது. நம்முடைய சுற்றம் நம்முடைய சுயத்தை பொருத்து அமைகிறது.
உடல் சுகம் தேடுகிறது, கலாச்சாரம் அதை தடுக்கிறது.

எதிர் பாலினம் , அதன் சுயநலம் , கவர்ச்சி நம்மை ஈர்க்கிறது. நட்பு என்ற பெயரில் நமது கலாச்சாரத்தினை பாதுகாக்க வேண்டியுள்ளது. காதல் என்ற பெயரில் நமது தேவைகளை சொல்லமுடிகிறது. முழு முதல் தேவையான உடலும், அகதேவையான நட்பும், காதல் என்ற ஒரு பெயர்சூட்டால் கலாசாரத்தின் சட்டதிட்டத்தில் சமரசம் செயப்படுகின்றதால் , காதல் ஒரு பாதுகாப்பான வடிகாலாக அனைவருக்கும் தோன்றுகிறது.

நானும் இதனால் தான் காதலிக்கிறேன்

Wednesday, June 23, 2010

செம்மொழியான தமிழ் மொழியே ........

செம்மொழி மாநாட்டின் கீதம்


http://www.youtube.com/watch?v=b_oU5ysFPfE


பிறபொற்கும் எல்லா உயிர்க்கும் பிறந்த பின்னர் ;
யாதும் ஊரே யாவரும் கேளிர் ..........

ஒன்பது நாழி, உடுப்பது இரண்டே;

உறைவிடம் என்பது ஒன்றே.

உழைத்து வாழ்ந்தோம் ....... உழைத்து வாழ்வோம் ..........

தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும் , நன் மொழியே நம் பொன் மொழியாம்.

போரை புறம் தள்ளி பொருளை போதுவாக்கவே ;

அமைதி வழி காட்டும் அன்பு மொழி,
அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்........

செம்மொழியான தமிழ் மொழியாம்,
செம்மொழியான தமிழ் மொழியாம் ;
செம்மொழியான தமிழ் மொழியாம் ,
செம்மொழியான தமிழ் மொழியாம் .



ஒர்றறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடல் அமைப்பை பகிர்த்து கூறும்,

ஒர்றறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே,
உணர்ந்திடும் உடல் அமைப்பை பகிர்த்து கூறும் ;

ஒதாபுகழ் தொல்காப்பியமும் ஒப்பற்ற குற ள் கூறும் உயர் பண்பாடு

ஒலிக்கின்ற சிலம்பும், மேகலையும் சிந்தாமணியுடனே

வளையாபதி, குண்டலகேசியும்...............

செம்மொழியான தமிழ் மொழியாம்,
செம்மொழியான தமிழ் மொழியாம்;
செம்மொழியான தமிழ் மொழியாம் ,
செம்மொழியான தமிழ் மொழியாம்;

கம்ப நாட்டாள்வாரும் கவி அரசவை நல்லாளும்,
எம்மதமும் ஏற்றும் புகழ் என்றும்
எத்தனையோ ஆயிரம் கவிதை நெய்வோர் தரும்
தடை அனைத்துக்கும் வித்தாக விளங்கும் மொழி


செம்மொழியான தமிழ் மொழியாம்,
செம்மொழியான தமிழ் மொழியாம்;
செம்மொழியான தமிழ் மொழியாம் ,

அகம் என்றும், புறம் என்றும், வாழ்வை அழகாக வகுத்தளித்து
ஆதி அந்தம் இல்லது இருக்கின்ற இனிய மொழி
மோதி வளரும் ...
உயிரான உலக மொழி தம் மொழி நம் மொழி .. அதுவே .........

செம்மொழியான தமிழ் மொழியாம், தமிழ் மொழி, தமிழ் மொழி. தமிழ் மொழி யா......... ஹ ........

செம்மொழியான தமிழ் மொழியாம்;
செம்மொழியான தமிழ் மொழியாம்,
செம்மொழியான தமிழ் மொழியாம் ;
செம்மொழியான தமிழ் மொழியாம்,

தமிழ் மொழியாம் எங்கள் தமிழ் மொழியாம்
தமிழ் மொழியாம் எங்கள் தமிழ் மொழியாம்

வாழிய வாழிய வே .. தமிழ் .. வாழிய வாழிய வே
வாழிய வாழிய வே .. தமிழ் .. வாழிய வாழிய வே

செம்மொழியான தமிழ் மொழியாம் .................................


பாடல் : டாக்டர். கலைஞர். மு கருணாநிதி

Monday, June 21, 2010

தீராததோ முதலாளித்துவம்???

சிகப்பு சகோதரர்கள் காலம் காலமாக சொல்லிகொண்டிருக்கும் , முதலாளித்துவம் இதுதானா என்று எனக்கு தெரியவில்லை .............

நானும் ஒரு தொழிலாளி தான்....... பல காலமாக என்னுடைய முதலாளி என்னதான் நினைக்கிறார் என்பதை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. அது என்னமோ தெரியல என்ன மாயமோ புரியல. இவர்கள் எல்லாம் நம்மை மனிதர்களாக தான் நினைகிரார்களா?

வெற்றிபெற கடுமையான உழைப்பு அவசியம்.... இது வெற்றிபெற்றுவிட்டதாக ஒருவர் நினைத்துகொள்ளும் பொது பிறர்க்கு தரும் உபதேசம். நிஜமாகவே இவர்கள் கடுமையான உழைப்பாளிகளா , அல்லது கடுமையான உழைப்பை சுரண்ட தெரிந்தவர்களா? என்பதே என் கேள்வி.
ஒரு நிறுவனத்தை ஒருவர் தொடங்கி தனது சொந்த முயற்சியால் அவர் வாழ்நாள் முடிவதற்குள் வெற்றிபெற்றுவிட்டதாக நினைதுகொள்வாறானால் இவர்களை எல்லாம் என்னவென்று சொல்ல?
சமுகத்தில் அந்த நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் எவ்வாறு வாழ்கிறார்கள் என்பதில் அல்லவே அவைகள் வெற்றி இருக்கிறது. நிஜமான விசுவாசமும் உண்மையான உழைப்பும் எந்த ஒரு தொழிலாளியிடமும் கிடையாது. ஆனால் உழைத்தால் தான் சோறு என்பதும், உண்மையாய் இருந்தால் தான் வேலை என்பதும் எல்லா தொழிலாளிக்கும் தெரியும் .

முதல் தலைமுறை முதலாளிகளுக்கு நிச்சயமாக தெரியும், உழைபவர்களை அழவைக்க கூடாது என்று. ஆனால் இரண்டாம் தலைமுறை (தரமான) முதலாளிகள் பணத்துடன் பிறந்தவர்களாக இருப்பார்கள் அல்லது அவர்களது பணம் நேர்மையான உழைப்பால் வந்திருக்காது........ எனவே பயம்....எங்கே தானாய் வந்த காசு வீணாய் போய்விடுமோ என்று....
பாவம் இவர்கள் ... நிச்சயம் நிம்மதியாய் தூங்க மாட்டார்கள்

Tuesday, June 8, 2010

விளம்பரம்....

தொண்ணூறுகளின் நடுவில் தொலைகாட்சியில் நான் பார்த்த ஒரு விளம்பரம்...

மார்க்கெட்டில் காய்கறி வாங்கிகொண்டு இருப்பார் ஒருவர். வயது முப்பது இருக்கலாம். நல்ல நிறம், செம்மையான தேகம். படிய தலைவாரி இருப்பார். திடீர் என அவருக்கு இருமல் வந்து விடும்.

தொடர்ச்சியான இருமல். முழு தேகமும் காற்றடித்து சாயும் நாணல் போல சாய்ந்து எழும். முழு மார்க்கெட்டும் இவரை தான் பார்த்துகொண்டிருக்கும். அவருக்கு மிக அருகில் ஒரு ஒளி வெள்ளம்......

முட்டை வடிவ முகத்தில் மின்மினி பூச்சி போன்ற கண்களுடன் ஒரு அழகு தேவதை...
வெள்ளை நிற மார் கச்சை...... பரத நாட்டிய பெண்கள் அணிவது போல் கீழாடை, நகைகள்....... மெலிந்த தேகம் ........ வெளிர்நிற இடுப்பு (லோ ஹிப் ). கையில் ஒரு தாம்பாள தட்டில் நிவாரண் 90 ஷாஷைகள்.

அன்ன நடை நடந்து வந்து அவர் முன் நின்று
கையில் உள்ள தட்டை சற்றே உயர்த்த....
தின் என்ர அவள் மார்பை நோக்கிய படியே,
ஷாஷைகளில் ஒன்றை கையில் எடுத்து,
சட்டேன்று அதை கிழித்து , தொண்டையில் பட மருந்தை ஊற்றி.
பட்டென்று இருமல் நின்றதாக அவர் சொல்ல.....
யப்பாபா .............

என்ன ஒரு கலை சிந்தனை........
விளம்பரயுக்தி ......
தமிழர் மரபை அறிந்து கொண்டவர்களால் மட்டுமே இவ்வாறு முடியும்.

எத்தனை பேர்
அந்த காலத்தில் மார்க்கெட்டில் இருமிகொண்டிருதார்களோ ......... ( லோ ஹிப் மங்கையை எதிர்பார்த்து )
இன்றும் எந்த ஒரு மளிகை கடையிலும் நிவாரண் 90 கிடைக்கும்
தமிழன் என்று சொல்லடா,
தலை நிமிர்த்து நில்லடா .........

Tuesday, April 6, 2010

ஓர் பழமொழி ......

சேலம் தினேஷ் இன்று ஒரு பழமொழி சொன்னார்....

"காசிக்கு போய் எதற்கு பிச்சைகாரன் காலில் விழ வேண்டும்"

சிந்திப்போம் .......

Tuesday, March 16, 2010

கவர்ந்த கவிதை.......

நான் அப்துல் ரகுமான் கவிதைகளை இப்போது படித்துகொண்டிருக்கிறேன்.... அதில் பிடித்த ஒன்றை பகிர்ந்துகொள்கிறேன்.....

பட்டாம்பூச்சிகளை பின்பற்றியிருந்தால் ...
மலர்களை சென்றடைந்திருபேன்.
மனிதர்களை
பின்பற்றிவிட்டேன்...........

Wednesday, March 10, 2010

நித்யானந்தா....தவறு செய்துவிட்டரா ???...

எனக்கு ஒன்று புரியவே இல்லை......

பைபிளில் எழுதபட்டிருபதை போல.....உங்களில் யார் பாவம் செய்யவில்லையோ அவன் இந்த பெண்ணின் மேல் முதல் கல் எரியகடவன் என்று இறைமகன் ஏசு கூறி , பாவி என்று குற்றம் சாட்டப்பட்டு, கொலை செய்யும் நோக்கில் அழைத்து வரப்பட்ட ஒரு பாலியல் தொழிலாளியை காப்பாற்றுகிறார்.

உலக தோற்றமுதல் ஆணும் பெண்ணும் செய்வதை தான் நித்யனதாவும் செய்தார்.... ஒரு வேளை, அவர் பிரசங்கித்துவந்த துறவறத்திற்கு எதிராக அவரது செயல் இருந்திருக்கலாம், ஆனால் இயற்கைக்கு மாறானது அல்லவே...

ஒருவனுடைய தத்துவங்களை , அவனே மீறுவதும், புது தத்துவங்களும், அனுபவங்களும் ஏற்படுவது இயற்கையே. தானே தனுக்கு என்று ஏற்படுத்தி உலகுக்கு சொல்லிகொண்டிருந்த விஷயங்கள், தானாய் மாறுவதும் இயல்பே.

முதலில் அணிந்த முகமூடி, புதிய அனுபவங்களை, பழைய தத்துவங்களோடு இணைய விடவில்லை. இதுவே நிதியனந்தாவின் விழ்ச்சிக்கு காரணம் என நான் நினைக்கிறேன்.

பழையன கழிதலும்........ புதியன புகுதலும் இயற்கையே........
பிறர்க்காக
பழையன போதித்து........
தமக்கு மட்டும் ..... புதியன சுகிப்பது........

தவறுதானே ?????