சிலருக்கு அபாரமான வசனத் திறமை உண்டு, அதை கவிதையாக்கி இங்கே எழுதுகிறேன்... இவை என் சிந்தனை அல்ல.....
"உன்னை நினைத்த பொது - என்
கண்ணிலிருந்து வெளியேறியது நீர்,
ஏன் என்று கேட்டபோது - உன்
காதலனே காரணம் என்றது கண்ணீர்,
இத்தனை அன்புடன் அவனிருக்கும்போது - எனக்கு
உன் கண்ணில் வேலை எதற்கு......"
"உன் மூச்சு காற்றில் காதல் சொல்வாய் என,
என்னை தீண்டும் தென்றலிடம்,
தேடுகிறேன் உன் மூச்சு காற்றை....
காத்திருக்கிறேன் நான் உனக்காக,
கரம் சேரும் நாளுக்காக."
" இப்போதெல்லாம் இதய சுமை அதிகமாகிவிட்டது,
என்னவனே- உடற்ப்பயிர்ச்சி செய்....."
" உன் விழி பார்வையால், என் உதடுகளை பூட்டினாய்,
உன் இதழ் சேவையால் என் உயிர் பூட்டை திறந்தாய்,
நீ அருகே வரும்போது நெஞ்சத்தில் அலை அடிக்கும்,
நீ தேகம் தொடும்போது நெஞ்சத்தில் தீ பிடிக்கும்"
ஒரு பெண்ணின் உணர்வுகளாக எழுதப்பட்ட இவையாவும், நிச்சயமாக அவளுடைய சிந்தனைகள். நான் இல்லை.... நான் இல்லை...
No comments:
Post a Comment