Saturday, October 8, 2011

தென்றல் காலங்கள்....

என்ன செய்தேன் நான், எனக்கு எதற்கு இந்த வரம்?
நான் உனக்கு மட்டும் தான் என்று நீ சொல்கிறாய்,

புள்ளியை சுற்றும் கோலம் போல என் சிந்தை முழுதும் உன் நினைவு,
கற்குவியலில் முத்தை போல் நீ என் வாழ்க்கையில்,

சாவதில் சந்தோசமில்லை என்பேன் நான்,

சாவதற்கு தைரியம் வேண்டும் என்கிறாய் நீ,




சந்தேகபடுகிறாய் என்பேன் நான்,




செத்துபோயவேடுவேன் என்கிறாய் நீ,




பிறர் உன்னை புகழ்ந்தால் , இருப்பு கொள்ளவில்லை எனக்கு,




பிறர் புகழ இருக்கிறாள் என்னவள் என்றென்ன சொல்கிறாய் நீ,




இச் என்ற ஒலி தொலை பேசியில் வந்தால்,




பட்டென்று குளிருதடி எனக்கு,




உன் குரலில் என் பெயர் கேட்டால்,




உச்சத்தை தொடுகிரதடி உணர்வு,




முத்தத்தால் உன்னை குளிப்பாட்ட,




சத்தியம் செய்யுதடி மனது,




உனது திடீர் மௌனங்கள், என்னை பைத்தியம் ஆக்கிவிடுகிறது,




உனது கோபங்களை பார்த்தால் நீ பைத்தியம் என்று தோன்றுகிறது,




உண்மையா பொய்யோ நீ பைத்தியம் என்பது,




உன்மேல் நான் பைத்தியம் என்பது உர்ஜிதமாகிவிட்டது,




unnaal வாழ்க்கை இனிக்கிறது எனக்கு,




பக்கத்தில் நீ இருந்தால் பத்திகொள்ளும் காதல் நெருப்பு,




கைக்கோர்த்து நடக்க நான் விரும்புகிறேன்,




கட்டிக்கொண்டு உறங்க நீ விரும்புகிறாய்,




வா என்று நீ சொல்லும்போது, சந்தோசமாய் இருக்கிறது,




நான் வருகிறேன் என்று பிரியும் போது உள்ளம் வலிக்கிறது,






No comments:

Post a Comment