2003 முதல் எவேர்க்ரீன் குடும்பத்தில் நான் இணைந்து விட்டேன். எவேர்க்ரீன் நான் வேலை செய்யும் கம்பெனி. இன்று வரை நான் செய்த பயணங்கள் எல்லாம் இந்த நிறுவனத்தில் வேலை செய்வதால் தான்.
ஒரு நவம்பர் மாதத்தில் தான் நான் பிறந்தேன், என் உடன்பணியாளர் ஒருவருக்கும் எனக்கும் ஒரு நாள் மட்டுமே வித்தியாசம். எனக்கு இருபத்தி மூன்று, அவருக்கு இருபத்தி நான்கு.
நவம்பர் மாத இரவுகள் நீளமானவை, இருபத்தி இரண்டாம் தேதி இரவு மைசூர் செல்லும் காவேரி எக்ஸ்பிரஸ் இரயிலில் நானும் எனது நண்பரும் ( ஏற்கனவே அறிமுகப்டுதிவிட்டேன்) பயணிப்பதாக முடிவாகி விட்டது. பிறந்தநாள் கொண்டாட்டங்களை அன்று மாலையே முடித்துவிட்டு இரயில் ஏறினோம்.
எனது நண்பருக்கு சைடு அப்பேர் பெர்த், எனக்கு அப்பேர் பெர்த். இரயிலின் உள்ளே நுழைந்த உடன் இருக்கைகளை சரிபார்த்து சுமைகளை இறக்கினோம். இரயில் புறப்பட்டது.
சைடு லோவேர் பெர்த்தில் ஒருவர் துண்டை விரித்து தூங்கிகொண்டிருந்தார் . எனது நண்பர், அவரை எழுப்பி "சார் உக்கந்துகலாமா " என்று கேட்டார். அவரோ "நான் படுக்கிறதுக்கு தான் சீட் வாங்கி இருக்கேன்" என்றார்.
எனது நண்பர் மிகவும் பொறுமையானவர். துண்டை விரித்து துங்கியவரிடம்" சார், கொஞ்ச நேரம் ஆகட்டும், ttr வந்ததுக்கு பின்னாடி நீங்க தூங்கலாம், அதுவரை நான் இங்கே உட்காருகிறேன் என்று சொன்னதோடு நிற்காமல் அவர் காலை தொடும்படி உட்கார்ந்தார். உடனே ஜன்னல் புறமாக அவர் திரும்பி படுத்தார். கால் இன்னமும் எனது நண்பரை தொட்டபடியே இருந்தது.
பொறுமை இழந்த எனது நண்பர், " கால கொஞ்சம் நவுத்துறது " என்று உரக்கவே சொன்னார். துண்டை விரித்து தூங்கியவர் நிச்சயமாக ஒரு செவிடாக இருக்கவேண்டும், கால் ஒரு இன்ச் கூட நகர வில்லை. எரிச்சலான என்னுடைய நண்பர், இரண்டாம் தர வார்த்தைகளை உபயோகப்படுத்தி யாரையோ திட்டுவது போல திட்ட ஆரம்பித்தார். ஆந்திர எல்லையின் ஒரு கிராமத்தை சேர்ந்த என்னுடைய நண்பர், நகர வாழ்க்கை வாழ்ந்தாலும், கிராமத்தை மறக்கவில்லை என்பது அவரது வசை சொற்களின் வீச்சில் புரிந்தது. ஆனாலும் கால் இன்னமும் நகரவேஇல்லை. வெறுத்து போன என் நண்பர், விருட் என்று எழுந்து என் அருகில் வந்து அமர்ந்து விட்டார். மறுநாள் எனக்கு பிறந்த நாள்.
ttr வந்தார், நேரம் கடந்துகொண்டே இருந்தது. முன் இரவின் பனிகாற்று இரயில் ஜான்னல்களுக்குள்நுழைய தொடங்கியது. சைடு லோவேர் பெர்த் காரன் ஜன்னல்களை அடைத்து, தூங்க தொடங்கினான். ஒரு ஜோடி கண்கள் அவன் சுக ஜீவியத்தை வெறுப்புடன் பார்த்துகொண்டிருந்தது.
மிகவும் மோசமான ஒரு சத்தம் கேட்க ஆரம்பித்தது. "என்ன சத்தம்" என்று எனது நண்பரிடம் கேட்டேன், "அந்த சொட்டை குறட்டை விடுகிறான்" என்றார் ( சைடு லோவேர் பெர்த் காரன் முழு சொட்டை) எனது நண்பர் ஏனோ தூங்கவில்லை.
பதினொன்று ஐம்பத்தி ஐந்து, எனது செல்பேசி மூலம் பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்ல அழைத்தார்கள் என் அம்மா. நான் தனியாக பேசலாம் என்று சற்றே தள்ளி toilet அருகில் சென்றேன். எனது நண்பர் என்னை கடந்து toilet உள்ளே சென்றார். அவர் உள்ளே இருக்கும்போது வெளியே சொட்டை " யார் ஜன்னலை திறந்தது ?" என்று சத்தம் போட்டான். யார் செய்திருப்பார் என்று எனக்கு புரிந்துவிட்டது. ஜன்னலை சாத்திவிட்டு சொட்டை மறுபடியும் தூங்க தொடங்கினான்.
ஒரு இருபத்தி ஆறு வயது மதிக்கத்தக்க ஒரு பெண், ஒரு முப்பது வயது ஆடவனை தாங்கிபிடித்தபடி toilet நோக்கி வந்தாள். வெஸ்டர்ன் toilet உள்ளே முதலில் சென்ற அவள், போன வேகத்தில் திரும்பி வந்தாள். கைத்தாங்கலாக அந்த ஆடவனை (கணவனாக இருக்க வேண்டும் ) தூக்கியபடி toilet உள்ளே சென்றாள். வெளியே தனியாக வந்து கதவை அடைத்தாள். கைகளை கட்டியபடியே என்னை பார்த்து சிநேகமாக சிரித்தாள். " என்ன ஆச்சு? என்று கேட்டேன். " என் husband தான், சின்ன வயசுல drug addict. paralytic அட்டாக் வந்து, இந்த மாறி ஆயிட்டார்" என்றாள். toilet கதவை தட்டும் சத்தம் கேட்டு அவள் கதவை திறந்து, அவளது கணவனை அழைத்து சென்றாள்.
மீண்டும் சொட்டை காட்டுகத்தலாக கத்திகொண்டிருந்தான், யாரோ ஜன்னலை மறுபடியும் திறந்துவிட்டர்களாம். நான் எனது upper பெர்த் நோக்கி சென்றேன். எனது நண்பரின் பெர்த்தை பார்த்தேன், அவர் என்னை பார்த்து சிரித்தார்... அவர் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி. சொட்டை இந்த முறை கொச்சை வார்த்தைகளால் திட்டிவிட்டு ஜன்னலை அடைத்து தூங்கினான். நான் படுத்த உடன் என் கண்முன் அந்த drug addict இன் மனைவி நியாபகத்தில் வந்தாள்.
கட்டிய பாவத்தால், கக்கூஸ் வரை கூடவருகிறாள் ஒரு மனைவி, அவன் இளவயதில் செய்த செயல்களால் அவன் மனைவி கஷ்டபடுகிறாள். நம்மால் யாரும் கஷ்டப்படகூடாது. இனி எந்தகாலத்திலும் drug என்கிற வார்த்தை என் வாழ்கையில் இல்லை என உறுதிஎடுத்தேன். தூங்கலாம் என்று நினைத்த பொது, மறுபடியும் சொட்டை கத்தினான். நான் எழுந்து என்னவென்று பார்த்தேன். ஜன்னல் மறுபடியும் திறந்திருந்தது. எனது நண்பர் செவிடன் போல் கண்ணை மூடி படுத்திருந்தார்.
சொட்டை இனிமேல் தூங்கமாட்டான் ...........
என் நண்பர் இனிமேல் நிம்மதியாக தூங்குவார்.......
இங்கே சிலர் கஷ்டபடுகிறார்கள், ஆனால் அதற்கு காரணம் அவர்களே தான்.....
No comments:
Post a Comment