Monday, August 17, 2009

புனே மழை...... தொல்லை ....

சற்று சிந்தித்து பாருங்கள், கொளுத்தும் வெயிலானாலும் வேலை செய்யலாம், ஆனால், அறை மணிநேர மழையினால் எல்லா வேலையும் கெட்டுவிடும். இப்படித்தான் நான் ஒருமுறை புனே செல்ல நேரிட்டது.

எனது சக தொழிலாளி அலி முகமது ஒரு ஆய்வுக்காக முன்னமே சென்றுவிட்டான். அது வடக்கே எனது முதல் பயணம். ஒரு நண்பனை போல மழை கூடவே வந்தது. மும்பை செல்லும் அந்த இரயில் ஒரு நாளின் நள்ளிரவுக்கும், விடியற்காலைகும் இடைப்பட்ட ஒரு நேரத்தில் புனே வந்தடைந்தது. புனேவில் நான் அறிந்தது அலி முகமதின் செல் பேசி நம்பர் மட்டுமே. கூப்பிட்டால் பதிலே இல்லை. எனக்கும் வயிற்றை ஏதோ செய்ய ஆரம்பித்து விட்டது காரணம், பயம் அல்ல வேறு எதுவோ....... ச்சே பசி..... ( நேற்று இரவு சாப்பிடவில்லை ).

நடை மேடையில் இருந்து வெளியே வருவதற்குள், ப்ளட் பார மூலைகளின் எச்சில் நாற்றமும், வடகிந்தியர்களின் சட்டை நாற்றமும் பழகிவிட்டது. இரயில் நிலையத்தின் எதிரில் இருந்த ஒரு ஹொட்டேலில் பசியாறலாம் என்று சென்றேன். மெனு கார்டில் இருந்த உணவுவகைகளில் தெரிந்தது ஒன்றே ஒன்று தான், sandwitch. சிக்கன் sandwitch ஆர்டர் செய்தேன். அருகில் அமர்த்திருந்த ஒருவரும் பரிட்சியமானவர்களாக இல்லை, அனைவரும் பயணிகளே. சிக்கன் sandwitch வந்தது, வேகவைத்த கோழியை இரண்டு ரொட்டி துண்டுகளுக்கு இடையில் வைத்து, குறுக்கே வெட்டி தருகிறார்கள். பச்சை கறியை தின்பது போல் இருந்தது. பனி புயலில் மாட்டிக்கொண்ட சிலர், சக பிரயாணிகளை தின்றதாக கேள்விப்பட்டது உண்மையாக இருக்கலாம்.

ஒரு மணிநேரத்திற்கு பின் அலி முகமது செல் பேசினான்...............................

புனேயின் புறநகர் மிகவும் அமைதியானது. அழகானதும் கூட. ஒதுக்குபுறமான அந்த லாட்ஜ் இன் முதல் தளம், அலி முகமது கதவை திறந்ததுடன், திரும்பி போய் படுத்துவிட்டான். புதிய இடம், காலை கடன்களை முடித்து, காபி சாப்பிட்ட பின்..........

No comments:

Post a Comment