Tuesday, February 15, 2011

மீண்டும் எஸ் எம் எஸ் கவிதைகள்.....

சத்தியமாக இந்த கவிதைகளை நான் எழுதவில்லை........

" சிப்பிக்குள் நுழைந்த சிறு தூசி ,
முத்தாக மாறுகிறது;
என்னவாக மாற நீ ,
எனக்குள் நுழைந்தாய்? "


" இரவில் நீ ,
தினமும் காணும்;
நிலவை போன்றது எனது எஸ் எம் எஸ்;
ஆனால் .......
நீ பதில் எஸ் எம் எஸ் அனுப்பும் நாள்,
எனக்கு பௌர்ணமி."

" பறவைகள் , ஒருமுறை கட்டிய கூட்டில்,
மறுமுறை முட்டையிடுவதில்லை;
மனிதன்,
தாத்தா கட்டிய வீட்டிற்கெல்லாம் ;
வாடகை வசூல் செய்கிறான்."


"சாவுக்கும் தூக்கத்துக்கும்,
ஒரே ஒரு வித்தியாசம் தான்;
தூங்கினால் கனவு வரும்,
செத்தால் தான் நிம்மதி வரும்."

நல்லா இருந்தா கமெண்ட் எழுதுங்க,
நல்ல இல்லைனா திட்டி எஸ் எம் எஸ் அனுப்புங்க......
அதையும் இங்கே எழுதுவேன்.

No comments:

Post a Comment