கடையேழு வள்ளல்களுக்கு சிலைவைக்க வேண்டும்
- பிச்சைக்காரர்கள் உண்ணாவிரதம்,
பறவைகள் போடும் எச்சம் எல்லாம், தரை மீது;
- புள்ளியிட்டு மறந்த கோலம்,
ஒட்டு துணியில்லாமல் இருப்பவனை , அம்மனச்சாமியார்
- தீர்காயுசாய் இரு என்று வாழ்த்தினார்,
கருப்பு பெண்களுக்கெல்லாம் கல்யானமாகிவிட்டதால்,
- சிவந்த பெண்கள் முகத்தில் கரி,
பிறந்த பெண்குழந்தை முத்தமிட்டால் , பிறவி மோட்சம் ;
- கிடைக்கும் உனக்கு,
கள்ளி பாலுக்கும் , கதிர் நெல்லுக்கும் வேறு வேலை தேடி,
- விஞ்ஞானிகள் ஆராய்ச்சி,
தனயன் மகனை, தன மகனாய் நினைத்தவன், தங்கை மகனை;
- கொலை செய்தது மகளுக்காக,
மகள் செத்துவிட்டதும் அவனுக்கு பைத்தியம் என்றனர்,
- ஓடிப்போனது தெரியாதவர்,
அவள் அரும்பு , அவன் உடும்பு, கையில்
- ரோஜாப்பூ;
என்னை விரும்பு, பின் விருந்து; பால் அறுந்து,
- முத்தாய்ப்பு;
உன் உடம்பு, என்னில் அடங்கு; நாம் இணைந்து,
- ஒரே அரிப்பு;
நாம் இணைந்து, தூரம் நடந்து; உயிர் வாழ்ந்து,
- சொறி சிரங்கு;
கருங்குரங்கு , நீ இறங்கு, பல மடங்கு,
- ரொம்ப சலிப்பு;
விபச்சாரம் செய்ததாக பதிமூன்று வயது சிறுமி,
- கைது என்றது தினசரி;
அமெரிக்க போலி பல்கலைக்கழகதிர்க்கும், நித்யானந்த
- சாமிக்கும் தொடர்பு எனச்சந்தேகம்;
தமிழை பாடமொழியாக கொண்ட மாணவருக்கு இருநூறு ரூபாய்
- தமிழக அரசு அறிவிப்பு;
வாகனம் நிறுத்த இடம் வேண்டி , விமானநிலையத்தில் ,
- கழிப்பறைகள் இடிக்கப்பட்டன;
பாடுபச்ச என்று புதிய போதை பொருள் , கிராம் ஐந்தாயிரம்,
- ஏழு நாள் போதைக்கு இது போதும்;
வாசனை சொக்ஸ் ( காலுறை ) விற்பனை, நாற்றத்திலிருந்து
- விடுபடுங்கள் அறுபது ரூபாயில் ;
சில்லறை இல்லை என்றவன் சட்டைப்பையில்,
- எதுவுமே இல்லை;
காந்தியின் சத்திய சோதனை,
- முப்பது ரூபாய் தான் ;
ஜோடிப்பொருத்தம் அருமை என்றனர்,
அண்ணன் தங்கை என அறியாதவர்;
காதலர் தினத்தில் கையில் தாலியுடன் ,
- அலைந்தது காதலர் இல்லை;
அரசாங்க அலுவலர்க்கு பத்து பை வைத்த கால் சட்டை வேண்டுமென,
- எல்லோரும் வேலை நிறுத்தம்;
சிலுவை இயேசுவின் கோவணம்,
- சித்திரக்காரனின் கருணை;
புல்லாங்குழல் மூலம் கஞ்சா பிடிக்க முடியும்,
- புதிய கண்டுபிடிப்பு.
மேலே உள்ளவற்றில் வரிகள் மாறி மாறி உள்ளது புரிந்தால் நீங்கள் புத்திசாலி ....
No comments:
Post a Comment