நான் என்னுடைய அப்பாவை கோயம்பேடு வரை அழைத்து செல்ல வேண்டிய கட்டாயம். எட்டு மணியிலிருந்து பத்து மணிவரை கிண்டியிலிருந்து கோயம்பேடு செல்வது கடினம். நங்கள் கிளம்பியது எட்டரை மணிக்குதான். இந்தியன் ஆயில் பங்கில் இருநூறு ரூபாய்க்கு மூன்று லிட்டர் பெட்ரோல் அடித்துவிட்டு கெளம்பினோம். நாளை விடுமுறை என்பதால் பயணிப்பது கடினமாக இருக்கும் என்று நான் நினைத்தேன். அசோக் நகர் இரண்டாவது சிக்னல் கடக்கும் வரை எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. அதன் பின் வாகன போக்கு வரத்தின் வேகம் சற்று கம்மியாக இருந்தது. மெட்ரோ ரயில் போக்குவரத்துக்காக கட்டப்பட்டுவரும் பாலங்களால் இந்த வேக மாற்றம் இருக்கலாம் என்று நினைத்தேன். ஊர்தே சில நிமிடங்கள் சென்றபின் தான் தெரிந்தது , ஸ்ரீ வசந்த பவன் என்னும் ஹோடேலின் வாசலில் நிற்கும் தண்ணீர் வண்டியால் தான் போக்குவரத்தில் நெரிசல் என்று.
இன்று காலை எழுந்ததே ஒரு போன் அழைப்பினால் தான். ஹோட்டல் வியாபாரம் என்பது சாதாரண விஷயம் அல்ல. இரவு ஒரு மணி ஆகிவிடும் வேலை முடிய. காலை மூன்று மணிக்கெல்லாம் வேலை தொடங்கிவிடும். ஐந்தரை மணிக்கு காபி கிடைக்காவிட்டால் ஹோட்டல் நடத்துவதில் அர்த்தமே இல்லை. பொதுவாக ஏழு மணியிலிருந்து பத்து மணி வரை சூடு பிடிக்கும் வியாபாரம்அதற்குப்பின் சாதாரணமாகவே இருக்கும். மாலை ஆறிலிருந்து பத்து வரை மீண்டும் வியாபாரம் நன்றாக இருக்கும். ஐந்து மணிக்கு டீ மாஸ்டர் போன் செய்தான். இரவு காட்சியாக யுத்தம் செய் படத்தை பார்த்துவிட்டு வந்ததால், கண்கள் கெஞ்சின. பால் வரவில்லை என்று மாஸ்டர் சொன்னதும் உயிர்பயம் வந்து விட்டது. அடுத்த நிமிடம் தூக்கம் எல்லாம் காணாமல் போய்விட்டது. நான் பலருக்கு போன் செய்து பத்து லிட்டர் பால் கிடைக்கும் படி செய்த பின்பு தான் பல்லை விளக்கினேன். இன்று நல்ல வியாபாரம் எந்த குறையும் இல்லை என்று நினைத்துக்கொண்டிருக்கும்போதே நிரஞ்சன் தண்ணீர் இல்லை என்றான். நேற்றே தண்ணீர் சொல்லிஆகிவிட்டதே என்று நான் கேட்ட போது. தண்ணீரின் விலை நூறு ருபாய் அதிகமாகிவிட்டது என்று கெட்டவனை நாளைக்கு பேசலாம் என்று அனுப்பியது நியாபகம் வந்தது. உடனே அவனுக்கு போன் செய்து வரச்சொல்லி அவன் வர எட்டு மணியானது. அவனிடம் மத்தியஸ்தம் பேசி தண்ணீர் இறக்கிக்கொண்டிருக்கும் பொது. போக்குவரத்து காவலர் ஒருவர் வந்தார். தண்ணீர் வண்டி வாசலிலேயே நிர்ப்பதால் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்தது. காவலரை பார்த்த உடன் என்ன சொல்வது என்றே புரியவில்லை. வந்தவர் நேராக என்னிடம் வந்து , எஸ் ஐ ரெண்டு தோசை வாங்கிட்டு வரச்சொன்னார் என்றார். நான் ஒடனே கடையின் உள்ளே நோக்கி சத்தமாக " சார் க்கு ரெண்டு ரோஸ்ட் பார்சல் " என்று சொல்லிவிட்டு, காபி சாப்டுங்க சார் என்றேன்.
எனக்குன் ஒன்னு தான் புரியவில்லை. நம்ம மொதலாளி கொடுக்குற சம்பளம் , நாம செய்ற வேலைக்கு கரெக்ட் தானான்னு. நைட் ரெண்டரை ஆயிடுச்சு தூங்குறதுக்கு , காலைல அஞ்சு மணிக்கெல்லாம் எழுந்து கடைய சுத்தம் பண்ணிட்டு பால் வரும்னு பாத்தா , வரல . என்ன செய்றது, மாஸ்டர் கிட்ட சொல்லி மொதலாளி கிட்ட போன் பண்ண சொன்னேன். ஏழு மனைக்கு வந்த மொதலாளி வந்த ஒடனே என்ன தான் திட்டினார். சொன்னாலும் திட்டு , சொல்லாட்டினாலும் திட்டு. தண்ணி இல்லைன்னு தெரிஞ்ச ஒடனே சொன்னேன். அதுக்கு போய் திட்டுறாரு.; சரியான லூசு. இல்லனா இல்லன்னு தானே சொல்லமுடியும். நாளைக்கு எந்தனபேறு தின்ன வருவான்னு இன்னைக்கு சொல்லமுடியுமா? நைட் போவும் பொது நூறு ரூபா கொடுத்து, ரெண்டு சீப்பு பழம் வாங்கிட்டு வர சொன்னார். நல்ல மல வாழப்பழம் கிடச்சுது. சீப்பு முப்பது ரூபாய்னு சோனான். ரெண்டு சீப்பு வாங்கிட்டு போய் மொதலாளிகிட்ட கொடுத்தேன். கூடவே முப்பது ருபாய் மிச்சமுனு சொல்லி கொடுத்தேன். பத்து ருபாய் கைல கொடுத்தார். கடையோட மாடில என்னோட பெட்டிக்குள்ள , இந்த இருபது ரூபாயையும் செத்து ரெண்டாயிரத்தி நாப்பது ருபாய் இருக்கு. ஒரு கிராம் தங்கம் மூவாயிரம் ரூபாயாம்ல?
இந்த கதை புரிகிறதா?........
No comments:
Post a Comment