Tuesday, June 8, 2010

விளம்பரம்....

தொண்ணூறுகளின் நடுவில் தொலைகாட்சியில் நான் பார்த்த ஒரு விளம்பரம்...

மார்க்கெட்டில் காய்கறி வாங்கிகொண்டு இருப்பார் ஒருவர். வயது முப்பது இருக்கலாம். நல்ல நிறம், செம்மையான தேகம். படிய தலைவாரி இருப்பார். திடீர் என அவருக்கு இருமல் வந்து விடும்.

தொடர்ச்சியான இருமல். முழு தேகமும் காற்றடித்து சாயும் நாணல் போல சாய்ந்து எழும். முழு மார்க்கெட்டும் இவரை தான் பார்த்துகொண்டிருக்கும். அவருக்கு மிக அருகில் ஒரு ஒளி வெள்ளம்......

முட்டை வடிவ முகத்தில் மின்மினி பூச்சி போன்ற கண்களுடன் ஒரு அழகு தேவதை...
வெள்ளை நிற மார் கச்சை...... பரத நாட்டிய பெண்கள் அணிவது போல் கீழாடை, நகைகள்....... மெலிந்த தேகம் ........ வெளிர்நிற இடுப்பு (லோ ஹிப் ). கையில் ஒரு தாம்பாள தட்டில் நிவாரண் 90 ஷாஷைகள்.

அன்ன நடை நடந்து வந்து அவர் முன் நின்று
கையில் உள்ள தட்டை சற்றே உயர்த்த....
தின் என்ர அவள் மார்பை நோக்கிய படியே,
ஷாஷைகளில் ஒன்றை கையில் எடுத்து,
சட்டேன்று அதை கிழித்து , தொண்டையில் பட மருந்தை ஊற்றி.
பட்டென்று இருமல் நின்றதாக அவர் சொல்ல.....
யப்பாபா .............

என்ன ஒரு கலை சிந்தனை........
விளம்பரயுக்தி ......
தமிழர் மரபை அறிந்து கொண்டவர்களால் மட்டுமே இவ்வாறு முடியும்.

எத்தனை பேர்
அந்த காலத்தில் மார்க்கெட்டில் இருமிகொண்டிருதார்களோ ......... ( லோ ஹிப் மங்கையை எதிர்பார்த்து )
இன்றும் எந்த ஒரு மளிகை கடையிலும் நிவாரண் 90 கிடைக்கும்
தமிழன் என்று சொல்லடா,
தலை நிமிர்த்து நில்லடா .........

No comments:

Post a Comment