Saturday, June 26, 2010

நீ ஏன் காதலிக்கிறாய்?....

நேற்று என்னுடைய நண்பன் அருண் என்னை பார்த்து கேட்ட கேள்வி இது.....



அருண் நன்கு படித்தவர், ஒருமணிநேரம் அவருடன் நேரம் செலவிட்டால், ஏதாவது ஒன்றை பற்றி நம்மை சிந்திக்க வைத்துவிடுவார். ஆனால் இது அவருடைய கேள்வி இல்லை. நேற்று முன்தினம், இரவு கல்லாறு கலகலப்பு முடிந்ததும், என்னை அருணுடைய வீட்டிற்கு தான் அழைத்து சென்றார்கள். அப்போது நான் தான் அருணிடம் இந்த கேள்வியை கேட்டிருக்கிறேன். அருண் அப்போது எந்த பதிலும் சொல்லவில்லை. ஆனால் மறுநாள் மறக்காமல் என்னை அதே கேள்வியை கேட்டிருக்கிறார்.



நாங்கள் அமர்ந்திருந்தது, கோவை பாலாஜி இன்டர்நேஷனல் ஹோட்டல் லை சார்ந்த மை பார் என்ற மது விடுதியிலே. " இந்த கேள்விக்கு ஒரு பேக் முடிந்தவுடன் பதில் சொல்லவா என்றேன் நான்.

தமிழ் கூறும் நல்லுலகில், சொந்த கருத்துகளை சொல்வதில் நிறைய பிரச்சனைகள் இருக்கின்றன. சர்ச்சைக்குரிய விஷயங்களை குறித்து பேசுவதே பல சங்கடங்களை ஏற்படுத்திவிடுகிறது. ஆனால் அருண் எதுவும் சொல்லவில்லை என்னுடைய பதிலை கேட்டு.



பதில் இது தான்....

மனித வழக்கை ஒரு வட்டம்.. குழந்தையாக இருந்த பொது, சுற்றமும் அது தரும் சுகமும் அலாதியானது. ஒருநாள் நாம் தினமும் சந்திக்கும் ஒருவரை பார்க்க முடிய வில்லை என்றால் வருத்தமாகிவிடும். தாயின் சத்தம் சிறுது நேரம் கேட்கவில்லை என்றாலும் அழுகை வந்து விடும். நம்மை பார்க்கும் எல்லாரும் சிரித்து கொண்டே இருக்க வேண்டும் என்று நினைப்போம். இந்த வட்டம் பள்ளி செல்லும் பொது சற்றே விரிவடைகிறது ஆனால் சுற்றம் வேண்டும். கல்லூரியில் மாறுகிறது,

நம்முடைய நட்பு மேம்படுகிறது. நம்முடைய சுற்றம் நம்முடைய சுயத்தை பொருத்து அமைகிறது.
உடல் சுகம் தேடுகிறது, கலாச்சாரம் அதை தடுக்கிறது.

எதிர் பாலினம் , அதன் சுயநலம் , கவர்ச்சி நம்மை ஈர்க்கிறது. நட்பு என்ற பெயரில் நமது கலாச்சாரத்தினை பாதுகாக்க வேண்டியுள்ளது. காதல் என்ற பெயரில் நமது தேவைகளை சொல்லமுடிகிறது. முழு முதல் தேவையான உடலும், அகதேவையான நட்பும், காதல் என்ற ஒரு பெயர்சூட்டால் கலாசாரத்தின் சட்டதிட்டத்தில் சமரசம் செயப்படுகின்றதால் , காதல் ஒரு பாதுகாப்பான வடிகாலாக அனைவருக்கும் தோன்றுகிறது.

நானும் இதனால் தான் காதலிக்கிறேன்

No comments:

Post a Comment