சிகப்பு சகோதரர்கள் காலம் காலமாக சொல்லிகொண்டிருக்கும் , முதலாளித்துவம் இதுதானா என்று எனக்கு தெரியவில்லை .............
நானும் ஒரு தொழிலாளி தான்....... பல காலமாக என்னுடைய முதலாளி என்னதான் நினைக்கிறார் என்பதை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. அது என்னமோ தெரியல என்ன மாயமோ புரியல. இவர்கள் எல்லாம் நம்மை மனிதர்களாக தான் நினைகிரார்களா?
வெற்றிபெற கடுமையான உழைப்பு அவசியம்.... இது வெற்றிபெற்றுவிட்டதாக ஒருவர் நினைத்துகொள்ளும் பொது பிறர்க்கு தரும் உபதேசம். நிஜமாகவே இவர்கள் கடுமையான உழைப்பாளிகளா , அல்லது கடுமையான உழைப்பை சுரண்ட தெரிந்தவர்களா? என்பதே என் கேள்வி.
ஒரு நிறுவனத்தை ஒருவர் தொடங்கி தனது சொந்த முயற்சியால் அவர் வாழ்நாள் முடிவதற்குள் வெற்றிபெற்றுவிட்டதாக நினைதுகொள்வாறானால் இவர்களை எல்லாம் என்னவென்று சொல்ல?
சமுகத்தில் அந்த நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் எவ்வாறு வாழ்கிறார்கள் என்பதில் அல்லவே அவைகள் வெற்றி இருக்கிறது. நிஜமான விசுவாசமும் உண்மையான உழைப்பும் எந்த ஒரு தொழிலாளியிடமும் கிடையாது. ஆனால் உழைத்தால் தான் சோறு என்பதும், உண்மையாய் இருந்தால் தான் வேலை என்பதும் எல்லா தொழிலாளிக்கும் தெரியும் .
முதல் தலைமுறை முதலாளிகளுக்கு நிச்சயமாக தெரியும், உழைபவர்களை அழவைக்க கூடாது என்று. ஆனால் இரண்டாம் தலைமுறை (தரமான) முதலாளிகள் பணத்துடன் பிறந்தவர்களாக இருப்பார்கள் அல்லது அவர்களது பணம் நேர்மையான உழைப்பால் வந்திருக்காது........ எனவே பயம்....எங்கே தானாய் வந்த காசு வீணாய் போய்விடுமோ என்று....
பாவம் இவர்கள் ... நிச்சயம் நிம்மதியாய் தூங்க மாட்டார்கள்
No comments:
Post a Comment